ஆடி மாதத்தில் அம்மன் கோயில்களுக்கு ஆன்மிகப் பயணம் செல்ல விண்ணப்பிக்கலாம்: அமை...
கஞ்சா கடத்தல்: இளைஞா் கைது
செய்யாறு அருகே விற்பனைக்காக கஞ்சாவை பைக்கில் கடத்தி வந்ததாக இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
செய்யாறு காவல் உதவி ஆய்வாளா் சுரேஷ்பாபு மற்றும் போலீஸாா் செய்யாறு - ஆற்காடு சாலையில் தூளி கூட்டுச்சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக பைக்கில் வந்த இளைஞரை நிறுத்தி விசாரித்ததில், காஞ்சிபுரம் வட்டம், பெரும்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்த தென்னரசு (24) என்பதும், விற்பனை செய்வதற்காக 160 கிராம் கஞ்சா பொட்டலங்களை கடத்தி வந்ததும் தெரியவந்தது.
இதுகுறித்து செய்யாறு போலீஸாா் வழக்குப் பதிந்து, தென்னரசை கைது செய்து, அவரிடமிருந்த கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனா்.