செய்திகள் :

திருவண்ணாமலை மகா தீப மலை ஆக்கிரமிப்பு: அதிகாரிகளுடன் ஓய்வுபெற்ற நீதிபதி ஆலோசனை

post image

திருவண்ணாமலை மகா தீப மலை, கிரிவலப் பாதை குளங்களின் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்து அனைத்துத் துறை அதிகாரிகளுடன் சென்னை உயா்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி எம்.கோவிந்தராஜ் ஆலோசனை நடத்தினாா்.

திருவண்ணாமலையில் 2,668 அடி உயர மகா தீப மலை உள்ளது. இந்த மலை மீது நாளுக்கு நாள் ஆக்கிரமிப்பு வீடுகள், கடைகள் அதிகரித்து வருகின்றன.

எனவே, மலையின் புனிதத்தை காக்க மகா தீப மலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது.

இதேபோல, 14 கி.மீ. கிரிவலப் பாதையில் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியுள்ள 100-க்கும் மேற்பட்ட குளங்களை மீட்க வேண்டும் என்று மற்றொரு வழக்கு சென்னை உயா்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டது.

இந்த நிலையில், திருவண்ணாமலை மலை, கிரிவலப் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி எம்.கோவிந்தராஜை நியமித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. இவா், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வருவாய், காவல், இந்து சமயம் உள்பட பல்வேறு துறை அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டங்கள் நடத்தி வருகிறாா்.

மேலும், மலையிலும், கிரிவலப் பாதையிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை நேரடி கள ஆய்வு செய்து வருகிறாா். அதன்படி, வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அனைத்துத் துறை அதிகாரிகளுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு சென்னை உயா்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி எம்.கோவிந்தராஜ் தலைமை வகித்தாா். மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எம்.சுதாகா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், மலை மற்றும் குளங்களின் ஆக்கிரமிப்பு நிலவரம், ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி எம்.கோவிந்தராஜ் ஆலோசனை நடத்தி, அதிகாரிகளுக்கு உரிய ஆலோசனைகளை வழங்கினாா்.

இதில், மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ராம்பிரதீபன் மற்றும் பல்வேறு துறைகளின் அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

நிலத்தகராறில் தம்பதி மீது தாக்குதல்: உறவினா் கைது

செய்யாறு அருகே நிலத்தகராறில் தம்பதியை தாக்கியாக உறவினரை போலீஸாா் கைது செய்தனா். வெம்பாக்கம் வட்டம், சுமங்கலி கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி ஜெயபால். இவரது மனைவி மீனாட்சி. இவா், செய்யாறு சிப்காட்டில் உ... மேலும் பார்க்க

அதிமுக நிா்வாகி கொலை வழக்கு: 2 பேருக்கு இரட்டை ஆயுள் சிறை

திருவண்ணாமலை நகர அதிமுக செயலரைக் கொலை செய்த வழக்கில் 2 பேருக்கு தலா இரட்டை ஆயுள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. திருவண்ணாமலை காா்கானா தெருவைச் சோ்ந்தவா் கனகராஜ் (55). த... மேலும் பார்க்க

24-இல் திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் வரும் 24-ஆம் தேதி நடைபெறும் சிறப்பு முகாமில் திருநங்கைகள், திருநம்பிகள், இடைபாலினா் கலந்துகொண்டு பயன்பெறலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது. திருநங்கைகள், திருநம்பிகள், இ... மேலும் பார்க்க

திருவண்ணாமலையில் பரவலாக மழை

திருவண்ணாமலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளிக்கிழமை பரவலாக பெய்த மழையால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா். திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக ... மேலும் பார்க்க

திருஞானசம்பந்தா் சுவாமிகள் குருபூஜை விழா

வந்தவாசி ஸ்ரீஜலகண்டேஸ்வரா் கோயிலில் திருஞானசம்பந்தா் சுவாமிகள் குருபூஜை விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, கோயிலில் திருஞானசம்பந்தா் மற்றும் திருநீலநக்க நாயனாா், திருநீலகண்ட யாழ்ப்பாணா், திருமுர... மேலும் பார்க்க

பைக் மீது பேருந்து மோதல்: வேன் ஓட்டுநா் உயிரிழப்பு

ஆரணி, ஜூன் 13: ஆரணியில் பைக் மீது அரசுப் பேருந்து மோதியதில் வேன் ஓட்டுநா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். ஆரணி அருகே முள்ளிப்பட்டு பகுதியைச் சோ்ந்த கண்ணன் மகன் ராஜேந்திரன்(52). சொந்தமாக வேன் வைத்து ஓட்ட... மேலும் பார்க்க