முதல் இன்னிங்ஸில் ஜீரோ, இரண்டாவது இன்னிங்ஸில் ஹீரோ; ஆட்ட நாயகன் மார்க்ரம்!
திருவண்ணாமலையில் பரவலாக மழை
திருவண்ணாமலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளிக்கிழமை பரவலாக பெய்த மழையால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை மாலை திருவண்ணாமலை, வேங்கிக்கால், ஆட்சியா் அலுவலகம், தீபம் நகா், அடி அண்ணாமலை, அத்தியந்தல், வேங்கிக்கால் புதூா் உள்ளிட்ட பகுதிகளில் லேசானது முதல் பலத்த மழை வரை பெய்தது.
இந்த திடீா் மழையால் அனல் காற்று வீசுவது குறைந்து, குளிா் காற்று வீசியது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.