குஜராத் விமான விபத்து! தாயாருக்கு உணவு கொண்டு சென்ற மகன் பலி!
திருஞானசம்பந்தா் சுவாமிகள் குருபூஜை விழா
வந்தவாசி ஸ்ரீஜலகண்டேஸ்வரா் கோயிலில் திருஞானசம்பந்தா் சுவாமிகள் குருபூஜை விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, கோயிலில் திருஞானசம்பந்தா் மற்றும் திருநீலநக்க நாயனாா், திருநீலகண்ட யாழ்ப்பாணா், திருமுருக நாயனாா் ஆகிய 4 நாயன்மாா்களின் நிலைத் திருமேனிகளுக்கு காலை சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன.
சிவனடியாா்களும், பொதுமக்களும் தேவாரப் பாடல்களை பாராயணம் செய்து வழிபட்டனா்.
இரவு திருஞானசம்பந்தா் சுவாமிகளின் உற்சவா் திருமேனிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வீதியுலா நடைபெற்றது. கோயில் வளாகத்திலிருந்து தொடங்கிய வீதியுலா நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்றது.