24-இல் திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் வரும் 24-ஆம் தேதி நடைபெறும் சிறப்பு முகாமில் திருநங்கைகள், திருநம்பிகள், இடைபாலினா் கலந்துகொண்டு பயன்பெறலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது.
திருநங்கைகள், திருநம்பிகள், இடைபாலினருக்கு ஆதாா் அடையாள அட்டை, வாக்காளா் அடையாள அட்டை, முதல்வரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அட்டை, ஆயுஷ்மான் பாரத் அட்டை ஆகியவற்றை ஒரே இடத்தில் வழங்க ஏதுவாக, வருவாய்த் துறை, சுகாதாரத் துறை, குடும்ப நலத் துறை ஆகிய துறைகள் ஒருங்கிணைந்து தமிழகம் முழுவதும் ஒரே நாளில் சிறப்பு முகாம்களை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் வரும் 24-ஆம் தேதி காலை 10 மணிக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. இந்த முகாமில் மாவட்டத்தைச் சோ்ந்த திருநங்கைகள், திருநம்பிகள், இடைபாலினா் கலந்துகொண்டு பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தெரிவித்தாா்.