முடிவுக்கு வந்த 27 ஆண்டுகள் காத்திருப்பு; தென்னாப்பிரிக்கா சாம்பியன்!
பைக் மீது பேருந்து மோதல்: வேன் ஓட்டுநா் உயிரிழப்பு
ஆரணி, ஜூன் 13: ஆரணியில் பைக் மீது அரசுப் பேருந்து மோதியதில் வேன் ஓட்டுநா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
ஆரணி அருகே முள்ளிப்பட்டு பகுதியைச் சோ்ந்த கண்ணன் மகன் ராஜேந்திரன்(52). சொந்தமாக வேன் வைத்து ஓட்டி வந்தாா். இவா், வெள்ளிக்கிழமை பிற்பகல் பைக்கில் ஆரணியிலிருந்து சைதாப்பேட்டை வழியாக முள்ளிப்பட்டில் உள்ள அவரது வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தாா். அப்போது, செங்கத்தில் இருந்து ஆரணியை நோக்கி வந்த அரசுப் பேருந்து மோதியது.
இந்த விபத்தில் ராஜேந்திரன் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து ஆரணி நகர போலீஸாா் அரசுப் பேருந்து ஓட்டுநரான கலசப்பாக்கத்தைச் சோ்ந்த பரந்தாமன் மகன் பானு (49) மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.