செய்திகள் :

'பேரம் பேசத் தெரியலனு சொல்றாங்க; எப்போ என்ன பண்ணணும்னு எனக்கு தெரியும்..'-திருமாவளவன் ஓப்பன் டாக்

post image

திருச்சியில் நேற்று (ஜூன் 14) விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் ‘மதச்சார்பின்மை காப்போம்’ என்ற தலைப்பில் பேரணி நடைபெற்றது.

இந்தப் பேரணியில் பேசிய திருமாவளவன், "திருச்சியில் பேரணி நடத்துவதற்கு முதலில் அனுமதி இல்லை என்று சொல்லிவிட்டார்கள். நாம் ஆளுங்கட்சி கூட்டணியில் இருந்தும் நமக்கு பேரணி நடத்த அனுமதி மறுக்கப்பட்டது. அவ்வளவு நெருக்கடிகளையும் தாங்கிக்கொண்டு களத்தில் நிற்கும் இயக்கம்தான் விசிக.

மதச்சார்பின்மையை காப்போம் பேரணி‌
மதச்சார்பின்மையை காப்போம் பேரணி‌

எல்லோரும் தேர்தல் கணக்குகளை பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், நமக்கு அந்த கவலை இல்லை. விசிக திமுகவிடம் சிக்கிக் கொண்டு தவிக்கிறது என்று சொல்கிறார்கள். அட அற்பர்களே, அரசியல் அறியாமையில் உளறும் அரைவேற்காடுகளே, அரசியல் திசை வழியை தீர்மானிப்பவர்கள் விசிக தான்.

இந்திய அரசியலையும் கூர்மைப்படுத்துபவர்களும் விசிக தான். மதச்சார்பின்மைக்கு ஆதரவானவர்கள், எதிரானவர்கள் என்று கூர்மைப்படுத்துகிற அரசியலை விசிக மட்டும் தான் செய்து கொண்டிருக்கிறது.

இதன் வலிமையை தெரியாதவர்கள், திருமாவளவனுக்கு அரசியல் செய்ய தெரியவில்லை, பேரம் பேச தெரியவில்லை, துணை முதலமைச்சர் பதவி வேண்டும் என்று கேட்க மறுக்கிறார் என்றெல்லாம் சொல்கிறார்கள்.

நாங்கள் முதல்வர் பதவிக்கே ஆசைப்படவில்லை. எங்கள் தந்தை அம்பேத்கர், பிரதமர் பதவியை கைப்பற்றுங்கள் என்று வழிகாட்டியிருக்கிறார். அதுதான் அதிகாரமுள்ள பதவி.

மதச்சார்பின்மையை காப்போம் பேரணி‌
மதச்சார்பின்மையை காப்போம் பேரணி‌

இந்த மண்ணின் பூர்வக்குடிகள் ஆட்சி அதிகாரத்தில் வர வேண்டும். எந்த நேரத்தில் என்ன செய்ய வேண்டும் என்று எங்களுக்கு தெரியும், எனக்கு தெரியும், விசிகவுக்கு தெரியும்.

யூடியூப்பில் யாரெல்லாமோ எனக்கு அறிவுரை வழங்குகிறார்கள். 35 ஆண்டுகளாக நாங்களும் அரசியல் செய்து கொண்டுதான் இருக்கிறோம்” என்று விசிக தலைவர் திருமாவளவன் பேசியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

இஸ்ரேல் - ஈரானுக்கு இடையே தொடரும் தாக்குதல்கள்; யாருக்கு எவ்வளவு பாதிப்புகள்?

'ஆபரேஷன் ரைஸிங் லயன்' என்கிற பெயரில், கடந்த வியாழக்கிழமை (ஜூன் 12) நள்ளிரவில், ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதலைத் தொடங்கியது. இதற்கு எதிர்வினையாக, இஸ்ரேல் மீது ஈரானும் தாக்குதல் நடத்துகிறது. இந்தத் தாக்கு... மேலும் பார்க்க

இஸ்ரேல் - ஈரான் இடையே நிலவும் போர்ப் பதற்றம்; போனில் பேசிய புதின்... என்ன சொல்கிறார் ட்ரம்ப்?

நேற்று அமெரிக்க அதிபர் ட்ரம்பின் பிறந்த நாள். அவரது நண்பரான ரஷ்ய அதிபர் புதின், அவருக்கு வாழ்த்து தெரிவிக்க தொலைபேசியில் அழைத்துள்ளார். இது குறித்து ட்ரம்ப் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டிருப்பதாவது..... மேலும் பார்க்க

`கோபம் இருந்தால் மன்னித்து விடுங்கள்; இது நீங்கள் உருவாக்கிய கட்சி'- ராமதாஸ் குறித்து பேசிய அன்புமணி

'கடைசி மூச்சு இருக்கும் வரை நானே தலைவர்' என்று கடந்த வெள்ளிக்கிழமை (ஜூன் 13) பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்திருந்தார். இந்த நிலையில், இன்று திருவள்ளூரில் அன்புமணி தலைமையில் பாமக பொதுக்குழு கூட்டம் நடந்... மேலும் பார்க்க

பாமக: வடிவேல் இராவணன் நீக்கம்; பாமகவிற்கு புதிய பொதுச்செயலாளர்- ராமதாஸ் உத்தரவு

பாமக நிறுவனர் ராமதாஸிற்கும், அன்புமணிக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு காரணமாக பாமகவில் அன்புமணி ஆதரவாளர்கள் நீக்கப்பட்டு புதிய பொறுப்பாளர்களை ராமதாஸ் நியமித்து வருகிறார். அன்புமணி, ராமதாஸ்விழ... மேலும் பார்க்க

தாக்குதலை தொடங்கிய இஸ்ரேல்; 'அமெரிக்கா உங்களைத் தாக்கும்' - ஈரானை மிரட்டும் ட்ரம்ப்! - ஏன்?

ஜூன் 12 நள்ளிரவு ஈரானை தாக்கியது இஸ்ரேல். 'இதில் அமெரிக்காவிற்கு எந்தப் பங்கும் இல்லை' என்று அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ அடுத்த நாளே அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்த நிலையில், அமெரிக்க... மேலும் பார்க்க

”திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு; தமிழில் நடத்தாவிட்டால்..” – சீமான்

திருச்செந்தூரில் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் வரும் ஜூலை 7-ம் தேதி குடமுழுக்கு நடைபெறவுள்ளது. இந்த குடமுழுக்கு திருவிழாவை தமிழில் நடத்தக்கோரி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்... மேலும் பார்க்க