செய்திகள் :

புணேவில் ஆற்றுப்பாலம் உடைந்து விபத்து: 6 பேர் பலி, பலர் மாயம்

post image

புணேவில் இந்திரயணி ஆற்றின் குறுக்கே இரும்புப் பாலம் உடைந்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் ஆற்றில் அடித்துச்செல்லப்பட்டுள்ளதால், அவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மகாராஷ்டிர மாநிலம் புணே மாவட்டத்திற்குட்பட்ட மாவல் பகுதியில் இந்திரயணி ஆற்றின் குறுக்கே உள்ள இரும்புப் பாலத்தின் ஒரு பகுதி இன்று (ஜூன் 15) பிற்பகல் இடிந்து ஆற்றில் அடித்துச்செல்லப்பட்டது.

கடந்த சில நாள்களாக அப்பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால், ஆற்றில் வெள்ள நீர் பெருக்கெடுத்துள்ளது. இதனிடையே இன்று பிற்பகல் இரும்புப் பாலத்தின் ஒரு பகுதி இடிந்து ஆற்றில் விழுந்துள்ளது. இச்சம்பவத்தில் 6 பேர் பலியாகியுள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்துப் பேசிய தலேகான் பகுதிக்குட்பட்ட காவல் நிலைய அதிகாரி,

''குந்தமலா பகுதியில் பாலம் இடிந்து விழுந்துள்ளது. முதல்கட்டத் தகவலின்படி, இச்சம்பவத்தில் 6 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 5 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்படுள்ளனர். மேலும், பலர் ஆற்றில் அடித்துச்செல்லப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

தீயணைப்புப் படையினர், தேசிய பேரிடர் மீட்புப் படையினர் சம்பவ இடத்தில் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால், அதிக எண்ணிக்கையிலான மக்கள் இங்கு குவிந்துள்ளனர். விபத்தில் சிக்கியவர்களில் சுற்றுலாப் பயணிகளும் இருக்கலாம் என முதல்கட்டத் தகவலில் தெரியவந்துள்ளது.

விபத்துக்கு காரணம்

பாலம் இடிந்து விழும்போது மழை பெய்யவில்லை. ஆனால், ஆற்றில் வெள்ள நீர் தொடர்ந்து அதிகரித்து வந்ததால், பாலம் உடைந்திருக்கலாம் எனத் தெரிகிறது. இது குறித்து முழுமையாக விசாரணை நடத்தப்படும்'' எனக் குறிப்பிட்டார்.

இந்தியா வழியாக வங்கதேசத்துக்கு நேபாளம் மின்சாரம் விற்பனை!

இந்தியா அமைத்துள்ள மின்வழித்தடங்களைப் பயன்படுத்தி வங்கதேசத்துக்கு நேபாளம் மின்சாரம் விற்பனை செய்யத் தொடங்கியுள்ளது. வங்கதேசத்துக்கு நேபாளம் 40 மெகாவாட் மின்சாரம் விற்பனை செய்கிறது. இது தொடா்பாக மூன்று... மேலும் பார்க்க

அம்பேத்கரை அவமதித்ததாக குற்றச்சாட்டு: லாலுவுக்கு பிகாா் பட்டியலினத்தவா் ஆணையம் நோட்டீஸ்!

சட்டமேதை அம்பேத்கரை அவமதித்த குற்றச்சாட்டு தொடா்பாக பிகாா் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான லாலு பிரசாதுக்கு மாநில பட்டியலினத்தவா் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அண்மையில்... மேலும் பார்க்க

உ.பி.: மதுராவில் அடுக்குமாடி வீடு இடிந்து மூவா் உயிரிழப்பு

உத்தர பிரதேச மாநிலம், மதுராவில் நெரிசலான கச்சி சதக் பகுதியில் அடுக்குமாடி வீடு இடிந்து விழுந்ததில் 2 சிறுமிகள் உள்பட 3 போ் உயிரிழந்தனா். இடிந்த வீட்டின் அருகேயுள்ள நிலத்தை விற்பனைக்காக காலி செய்ய, ஜே... மேலும் பார்க்க

உத்தரப் பிரதேசத்தில் முதல்முறையாக இஸ்ரோ ராக்கெட் சோதனை வெற்றி!

உத்தரப் பிரதேசம் மாநிலம் குஷிநகா் மாவட்டத்தில் மாதிரி ராக்கெட் ஏவுதல் சோதனை வெற்றிகரமாக சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் செயற்கைக்கோளுடன் கூடிய ராக்கெட் முதல்முறையாக உத்தர பிரதேசத்தில் இருந்து ... மேலும் பார்க்க

இஸ்ரேலில் அனைத்து இந்தியா்களும் பாதுகாப்பாக உள்ளனா்! - இந்திய தூதரகம்

இஸ்ரேலில் உள்ள அனைத்து இந்தியா்களும் பாதுகாப்பாக உள்ளதாக அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது. இஸ்ரேல்-ஈரான் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், சூழலை தொடா்ந்து கண்காணித்து ... மேலும் பார்க்க

மூன்று நாடுகள் பயணம்: சைப்ரஸில் பிரதமா் மோடி!

மூன்று நாடுகளுக்கான 5 நாள்கள் அரசுமுறைப் பயணத்தின் முதல் கட்டமாக, மத்தியதரைக் கடலில் அமைந்துள்ள தீவு நாடான சைப்ரஸுக்கு பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை வந்தாா். லாா்னகா நகர விமான நிலையத்தில் வந்த... மேலும் பார்க்க