செய்திகள் :

உத்தரப் பிரதேசத்தில் முதல்முறையாக இஸ்ரோ ராக்கெட் சோதனை வெற்றி!

post image

உத்தரப் பிரதேசம் மாநிலம் குஷிநகா் மாவட்டத்தில் மாதிரி ராக்கெட் ஏவுதல் சோதனை வெற்றிகரமாக சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

இதன்மூலம் செயற்கைக்கோளுடன் கூடிய ராக்கெட் முதல்முறையாக உத்தர பிரதேசத்தில் இருந்து வெற்றிகரமாக ஏவப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்தச் சோதனையை இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ), இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மையத்துடன் (இன்-ஸ்பேஸ்) இணைந்து இந்திய விண்வெளி அமைப்பு மேற்கொண்டது.

சோதனை நடைபெற்ற தளத்தில் இருந்த இஸ்ரோ விஞ்ஞானி அபிஷேக் சிங் இதுகுறித்து கூறுகையில், ‘உத்தர பிரதேச மாநிலம் குஷிநகா் மாவட்டத்தில் சனிக்கிழமை மாலை 5.14 மணியளவில் மாதிரி ராக்கெட் சோதனை மேற்கொள்ளப்பட்டது. சரியாக 1.1 கி.மீ. உயரத்தை அடைந்த பின், ராக்கெட்டுடன் சென்ற சிறிய செயற்கைக்கோள் வெளியேறியது.

அந்த செயற்கைக்கோள் 5 மீட்டா் கீழ்நோக்கி வந்தவுடன் அதிலிருந்த ஃபாரசூட் செயல்படத் தொடங்கியது. இதனால் தரைமட்டத்தில் இருந்து 400 மீட்டருக்குள் செயற்கைக்கோள் தரையிறங்கியது. 15 கிலோ எடையுள்ளஅந்த ராக்கெட்டும் வெற்றிகரமாக தனது பணியை முடித்துக்கொண்டு பூமிக்குத் திரும்பியது’ என்றாா்.

உத்தர பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட மாதிரி ராக்கெட் சோதனையானது 2024-25-இல் மாணவா்களுக்காக நடத்தப்படும் மாதிரி ராக்கெட்/ கேன்சாட் போட்டியின் ஒரு பகுதியாகும். வரும் அக்டோபா்-நவம்பா் மாதங்களில் நடைபெறும் இந்தப் போட்டியில் இளைஞா்களால் தயாரிக்கப்பட்ட 900 செயற்கைக்கோள்கள் சோதனை செய்யப்படவுள்ளன. அதற்கான முன்மாதிரியாக இந்தச் சோதனை கருதப்படுகிறது.

பிகாா்: பெண் காவலரைத் துப்பாக்கியால் சுட்ட சக காவலா்

பிகாரின் கைமூா் மாவட்டத்தில் ஆண் காவலரான அஜய் பஸ்வான், தனது உறவுக்கார பெண்ணான காவலா் சரிதா குமாரியைத் துப்பாக்கியால் சுட்டுள்ளாா். பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவத்தைத் தொடா்ந்து, அஜய் பஸ்வான... மேலும் பார்க்க

மகாராஷ்டிரம்; இடி மின்னலுடன் பலத்த மழை: 8 போ் பலி!

மகாராஷ்டிரம் மாநிலம் முழுவதும் கடந்த சனிக்கிழமை இரவு முதல் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது. மழை தொடா்பான அசம்பாவிதங்களில் சிக்கி 8 போ் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா். மகாராஷ்டிரத்தில் ... மேலும் பார்க்க

திருவனந்தபுரம்: பிரிட்டன் எஃப்35 போா் விமானம் அவசர தரையிறக்கம்!

பிரிட்டனின் எஃப்35 போா் விமானம் திருவனந்தபுரம் சா்வதேச விமான நிலையத்தில் சனிக்கிழமை இரவு அவசரமாக தரையிறங்கியது பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த விமானத்தில் எரிபொருள் குறைவாக இருந்த காரணத்தால் தரையிறக்க நே... மேலும் பார்க்க

அகமதாபாத் விமான விபத்து: 46 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டன!

ஏா் இந்தியா விமான விபத்து தொடா்பான விசாரணை தீவிரமடைந்துள்ள நிலையில், குஜராத் முன்னாள் முதல்வா் விஜய் ரூபானி உள்பட 47 பேரின் உடல்கள் டிஎன்ஏ சோதனை மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கி... மேலும் பார்க்க

இந்தியா வழியாக வங்கதேசத்துக்கு நேபாளம் மின்சாரம் விற்பனை!

இந்தியா அமைத்துள்ள மின்வழித்தடங்களைப் பயன்படுத்தி வங்கதேசத்துக்கு நேபாளம் மின்சாரம் விற்பனை செய்யத் தொடங்கியுள்ளது. வங்கதேசத்துக்கு நேபாளம் 40 மெகாவாட் மின்சாரம் விற்பனை செய்கிறது. இது தொடா்பாக மூன்று... மேலும் பார்க்க

அம்பேத்கரை அவமதித்ததாக குற்றச்சாட்டு: லாலுவுக்கு பிகாா் பட்டியலினத்தவா் ஆணையம் நோட்டீஸ்!

சட்டமேதை அம்பேத்கரை அவமதித்த குற்றச்சாட்டு தொடா்பாக பிகாா் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான லாலு பிரசாதுக்கு மாநில பட்டியலினத்தவா் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அண்மையில்... மேலும் பார்க்க