செய்திகள் :

Ahmedabad Plane Crash: கணவனுடன் வாழ லண்டன் புறப்பட்ட இளம் பெண்; விமான விபத்தில் பலியான சோகம்

post image

நேற்று குஜராத் அகமதாபாத் விமான நிலையத்தில் குஷ்பு கன்வார் ஆசையுடனும், எதிர்பார்ப்புடனும், புதிய வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தைத் தொடங்க நம்பிக்கையுடன் காத்திருந்தார்.

ஆனால், அவரை வழியனுப்ப வந்தவர்களின் கண்களிலிருந்து அவரின் முகம் மறைவதற்கு முன்பே, பெரும் அதிர்ச்சிகர செய்தியை உலகம் அவர்களுக்குச் சொல்லியிருக்கிறது.

Ahmedabad Plane Crash
Ahmedabad Plane Crash

ராஜஸ்தானின் அரபா துடாவதா கிராமத்தைச் சேர்ந்த மதன் சிங் ராஜ்புரோஹித்தின் மகள் குஷ்பு கன்வார். இவருக்கும், லூனியில் உள்ள கரபைரா புரோஹித்தைச் சேர்ந்த விபுல் சிங் ராஜ்புரோஹித்துக்கும் கடந்த ஜனவரி 18 அன்று திருமணம் நடந்தது. விபுல் சிங் ராஜ்புரோஹித் லண்டனில் மருத்துவராகப் பணியாற்றுகிறார்.

திருமணம் முடிந்த சில வாரங்களிலேயே விபுல் சிங் ராஜ்புரோஹித் லண்டன் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதனால், விரைவில் மனைவி குஷ்பு கன்வாரையும் லண்டனுக்கு அழைத்துக்கொள்வதாகத் தெரிவித்திருக்கிறார்.

அந்த நாள் எப்போது வரும் எனக் காத்திருந்த குஷ்பு கன்வாருக்கு லண்டன் செல்வதற்கான எல்லா ஏற்பாடுகளும் முடிந்தது. புதன்கிழமை மாமியார் வீட்டுக்குச் சென்று தங்கிவிட்டு, எல்லோரையும் சந்தித்து வாழ்த்துப் பெற்று, வியாழக்கிழமை விமானத்தில் புறப்பட்டார்.

இந்த நிலையில்தான் ஏர் இந்தியா விமான விபத்து நடந்தது. இறந்தவர்களில், ராஜஸ்தானைச் சேர்ந்த 12 பயணிகள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதில் பலோத்ராவைச் சேர்ந்த குஷ்பூவும் ஒருவர்.

இந்தச் செய்தி அவரின் குடும்பத்தாருக்கு மட்டுமல்ல, அவரின் கிராமத்தாருக்கும் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

அகமதாபாத்: `விஜய் ரூபானி' விமான விபத்தில் மரணித்த 2-வது குஜராத் முதல்வர்!

அகமதாபாத் விமான விபத்தில் மரணமடைந்த பாஜக தலைவர் விஜய் ரூபானி குஜராத் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சராவார். இவரது மரணம் 1965ம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் போரின்போது பாக் ஜெட் விமானத்தால் சுட்டு வீழ்த்த... மேலும் பார்க்க

அகமதாபாத் விமான விபத்து: "சுற்றியும் சடலங்கள்; விரிசல் வழியே..." - தப்பிப் பிழைத்தவர் சொல்வது என்ன?

"விமானம் டேக் ஆஃப் ஆகி 30 நொடிகள் ஆகியிருக்கும். அதிக சத்தம்... விமானம் விழுந்துவிட்டது. எல்லாம் வேகமாக நடந்தேறிவிட்டது.நான் எழுந்தபோது என்னைச் சுற்றிச் சடலங்களாகக் கிடந்தது. எனக்குப் பயமாக இருந்தது. ... மேலும் பார்க்க

Ahmedabad Plane Crash: விமான விபத்துகளுக்கான காரணத்தைக் கூறும் 'Black Box' பற்றி தெரியுமா?

குஜராத் மாநில தலைநகர் அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம் விபத்துக்கு உள்ளாகியிருக்கிறது. என்ன நடந்தது?ஏர் இந்தியாவின் விமானம் சர்தார் வல்லபாய் படேல் விமான நிலையத்த... மேலும் பார்க்க

அகமதாபாத் விமான விபத்து: கனவுகளுடன் தொடங்கிய பயணம்... 3 குழந்தைகளுடன் பரிதாபமாக உயிரிழந்த பெற்றோர்

இந்தியாவை உறையச் செய்த சம்பவத்தில் ஒன்று ஏர் இந்தியா விமான விபத்து. குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து நேற்று பிற்பகல் 1:38 மணிக்கு லண்டன் நோக்கிப் புறப்பட்ட ஏர் இந்தியா நிறுவனத்தின் AI171 ... மேலும் பார்க்க

சென்னை: மெட்ரோ பாலம் விழுந்து விபத்து - ஒருவர் பலியான சோகம்!

சென்னை ராமாபுரம் பகுதியில் DLF அருகே மெட்ரோ தூணில் இருந்து கட்டுமானம் கீழே விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் பாதைக்கான இரண்டாம் கட்ட கட்டுமானப் பணிகள் பூந்தமல்லியில் இருந்து கலங்கரை விளக்கம... மேலும் பார்க்க

Ahmedabad Plane Crash: "அந்த ஒருவரைப் பார்த்தேன்; உடல்களை மீட்கும் பணி முடிந்துவிட்டது" - அமித் ஷா

குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து இன்று பிற்பகல் 1:38 மணிக்கு லண்டன் நோக்கிப் புறப்பட்ட ஏர் இந்தியா நிறுவனத்தின் AI171 விமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளானது.விமான நிலையத... மேலும் பார்க்க