'இத்தனை வருடத்தில் இன்றைக்குதான் விருது வாங்கியிருக்கேன்!' - கருணாஸ் | Vikatan C...
அகமதாபாத் விமான விபத்து: கனவுகளுடன் தொடங்கிய பயணம்... 3 குழந்தைகளுடன் பரிதாபமாக உயிரிழந்த பெற்றோர்
இந்தியாவை உறையச் செய்த சம்பவத்தில் ஒன்று ஏர் இந்தியா விமான விபத்து. குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து நேற்று பிற்பகல் 1:38 மணிக்கு லண்டன் நோக்கிப் புறப்பட்ட ஏர் இந்தியா நிறுவனத்தின் AI171 விமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளானது.
விமான நிலையத்துக்கு அருகிலுள்ள மெஹானி எனும் குடியிருப்புப் பகுதியில், மருத்துவ மாணவர்கள் விடுதியின் மீது விமானம் மோதி விழுந்தது.

ஏர் இந்தியாவின் கூற்றின்படி இந்த விமானத்தில், 169 இந்தியப் பயணிகள், 61 வெளிநாட்டுப் பயணிகள் மற்றும் 2 பைலட்டுகள், விமானப் பணியாளர்கள் 10 பேர் என மொத்தம் 242 பேர் இருந்தனர்.
இந்த விபத்து விமானத்தில் பயணித்தவர்களின் நம்பிக்கையைப் பறித்து, அவர்களின் குடும்பத்தாருக்கு ஆறாத காயத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதில் ஒன்று பிரதிக் ஜோஷியின் குடும்ப மரணம்.
மென்பொருள் நிபுணர்
ராஜஸ்தானின் பன்ஸ்வாரா பகுதியைச் சேர்ந்தவர் பிரதிக் ஜோஷி. மனைவி, குழந்தைகளைப் பிரிந்து கடந்த ஆறு ஆண்டுகளாக லண்டனில் மென்பொருள் நிபுணராகப் பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில், புதிய வாழ்க்கையைத் தொடங்க, குழந்தைகளின் கனவுகளை நிறைவேற்ற, மனைவியின் ஆசையைப் பூர்த்தி செய்ய மூன்று குழந்தைகளையும், மனைவியையும் லண்டன் அழைத்துச் செல்ல முடிவு செய்தார்.
அதற்காக மருத்துவரான அவரின் மனைவி கோமி வியாஸ் தன் பணியை இரண்டு தினங்களுக்கு முன்புதான் ராஜினாமா செய்திருக்கிறார்.
எனவே பெரும் கனவுடன் ஏர் இந்தியா விமானத்தில் ஏறி அமர்ந்திருக்கிறது குடும்பம். தூரதிஷ்டமாக நடந்த இந்த விமான விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

லட்சியவாதிகள்
இவர்களின் இழப்பு குறித்து அவர்கள் வசித்த பகுதியைச் சேர்ந்த மக்கள் பேசும்போது, ``இருவரும் லட்சியவாதிகள், கடின உழைப்பாளிகள். இருவரும் நன்கு படித்தவர்கள். குழந்தைகளுக்காகத் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தவர்கள்.
அவர்களின் மரணச் செய்தி பன்ஸ்வாராவை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. நண்பர்கள், உறவினர்கள் மற்றும் சக ஊழியர்களை அவநம்பிக்கையில் ஆழ்த்தியிருக்கிறது" என்றனர்.