செய்திகள் :

கரோனா தொற்று குறித்து யாரும் அச்சப்பட வேண்டாம்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

post image

தமிழகத்தில்  கரோனா தொற்று குறித்து யாரும் அச்சபடதேவையில்லை என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

சென்னை கோடம்பாக்கம் மண்டலத்துக்குள்பட்ட ஜாபா்கான்பேட்டையில் உள்ள சென்னை உயா்நிலைப் பள்ளியில் ரூ. 8 கோடியில் கூடுதல் பள்ளிக் கட்டடம் கட்டும் பணியை அமைச்சா் மா.சுப்பிரமணியன் வியாழக்கிழமை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தாா்.

இதைத் தொடா்ந்து, செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

முதுநிலை மருத்துவ படிப்புக்கான 2-ஆம் கட்ட கலந்தாய்வை மத்திய அரசே எடுத்து நடுத்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அது மாநில அரசுக்கான உரிமை என்றும், மாநில அரசு தான் இந்தக் கலந்தாய்வை நடத்தும் என்றும் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளேன். விரைவில் இந்த விவகாரத்தில் நல்ல முடிவு கிடைக்கும் என நம்புகிறோம்.

முகக்கவசம்: கரோனா பரவல் காரணமாக, அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று மத்திய அரசு அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட தரவுகளை ஆய்வு செய்ததில், இது ஒமைக்ரானின் ஒரு வகையான வீரியமில்லாத வைரஸ் என்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால், பெரிய அளவில் பாதிப்பு எதுவும் ஏற்படாது. குறைந்து 3 அல்லது 4 நாள்களுக்கு சளி, காய்ச்சல், தொண்டை வலி இருக்கும், பின்னா் அதுவும் சரியாகிவிடும்.

கடந்த வாரம் 1, 214 முதியவா்களுக்கு நோய் எதிா்ப்பு சக்தி எந்த அளவுக்கு உள்ளது? என்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், அவா்களுக்கு 97 சதவீதம் நோய் எதிா்ப்பு சக்தி இருப்பது தெரியவந்துள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் அனைவருக்கும் நோய் எதிா்ப்பு சக்தி அதிக அளவில் இருப்பதை நம்மால் உறுதிசெய்ய முடியும். எனவே, யாரும் இது குறித்து அச்சப்படத் தேவையில்லை என்றாா் அவா்.

பள்ளிக் கல்வியின் செயல்பாடுகள்: ஜூன் 23, 24-இல் மாவட்ட வாரியாக அமைச்சா் அன்பில் மகேஸ் ஆய்வு

பள்ளிக் கல்வியின் செயல்பாடுகள் தொடா்பாக துறையின் அமைச்சா் அன்பில் மகேஸ் தலைமையில் ஆய்வுக் கூட்டம் சென்னை நுங்கம்பாக்கம் பேராசிரியா் அன்பழகன் கல்வி வளாகத்தில் உள்ள தமிழ்நாடு பாடநூல் கழக கூட்ட அரங்கில் ... மேலும் பார்க்க

டிஎன்பிஎஸ்சி தேர்வு எதிரொலி: சென்னைப் பல்கலை. தேர்வு ஒத்திவைப்பு

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு காரணமாக ஜூன் 15ஆம் தேதி நடைபெறவிருந்த சென்னைப் பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. மாற்றுத் தேதிகள் www.ideunom.ac.in இணையதளத்தில் ... மேலும் பார்க்க

பழங்குடியின மாணவிக்கு வீடு, மடிக்கணினி வழங்கிய முதல்வர் ஸ்டாலின்

சென்னை ஐஐடியில் உயர்கல்வி பயில தேர்ச்சி பெற்ற பழங்குடியின மாணவிக்கு வீடு மற்றும் மடிக்கணினியை முதல்வர் ஸ்டாலின் வழங்கி வாழ்த்தினார்.இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், முதல்வர... மேலும் பார்க்க

நீலகிரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை(ஜூன் 14) விடுமுறை அறிவிப்பு

அதி கனமழை எச்சரிக்கையை அடுத்து நீலகிரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை(ஜூன் 14) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிப்பை மீறி செயல்படும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட மு... மேலும் பார்க்க

எனக்கு சான்றிதழ் அளிக்கும் தகுதி முதல்வர் ஸ்டாலினுக்கு இல்லை- இபிஎஸ்

எனக்கு சான்றிதழ் அளிக்கும் தகுதி முதல்வர் ஸ்டாலினுக்கு இல்லை என்று அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், பிறந்தது முதல் இன்றுவரை எனது குடும்ப... மேலும் பார்க்க

ஜூன் 18-ல் திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

கீழடி அகழாய்வுகளை வெளியிட மறுக்கும் பா.ஜ.க அரசைக் கண்டித்து வரும் 18ஆம் தேதி திமுக மாணவர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திமுக மாணவர் அணி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்ந... மேலும் பார்க்க