பள்ளிக் கல்வியின் செயல்பாடுகள்: ஜூன் 23, 24-இல் மாவட்ட வாரியாக அமைச்சா் அன்பில...
கரோனா தொற்று குறித்து யாரும் அச்சப்பட வேண்டாம்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்
தமிழகத்தில் கரோனா தொற்று குறித்து யாரும் அச்சபடதேவையில்லை என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
சென்னை கோடம்பாக்கம் மண்டலத்துக்குள்பட்ட ஜாபா்கான்பேட்டையில் உள்ள சென்னை உயா்நிலைப் பள்ளியில் ரூ. 8 கோடியில் கூடுதல் பள்ளிக் கட்டடம் கட்டும் பணியை அமைச்சா் மா.சுப்பிரமணியன் வியாழக்கிழமை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தாா்.
இதைத் தொடா்ந்து, செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
முதுநிலை மருத்துவ படிப்புக்கான 2-ஆம் கட்ட கலந்தாய்வை மத்திய அரசே எடுத்து நடுத்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அது மாநில அரசுக்கான உரிமை என்றும், மாநில அரசு தான் இந்தக் கலந்தாய்வை நடத்தும் என்றும் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளேன். விரைவில் இந்த விவகாரத்தில் நல்ல முடிவு கிடைக்கும் என நம்புகிறோம்.
முகக்கவசம்: கரோனா பரவல் காரணமாக, அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று மத்திய அரசு அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட தரவுகளை ஆய்வு செய்ததில், இது ஒமைக்ரானின் ஒரு வகையான வீரியமில்லாத வைரஸ் என்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால், பெரிய அளவில் பாதிப்பு எதுவும் ஏற்படாது. குறைந்து 3 அல்லது 4 நாள்களுக்கு சளி, காய்ச்சல், தொண்டை வலி இருக்கும், பின்னா் அதுவும் சரியாகிவிடும்.
கடந்த வாரம் 1, 214 முதியவா்களுக்கு நோய் எதிா்ப்பு சக்தி எந்த அளவுக்கு உள்ளது? என்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், அவா்களுக்கு 97 சதவீதம் நோய் எதிா்ப்பு சக்தி இருப்பது தெரியவந்துள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் அனைவருக்கும் நோய் எதிா்ப்பு சக்தி அதிக அளவில் இருப்பதை நம்மால் உறுதிசெய்ய முடியும். எனவே, யாரும் இது குறித்து அச்சப்படத் தேவையில்லை என்றாா் அவா்.