செய்திகள் :

ஜூன் 18-ல் திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

post image

கீழடி அகழாய்வுகளை வெளியிட மறுக்கும் பா.ஜ.க அரசைக் கண்டித்து வரும் 18ஆம் தேதி திமுக மாணவர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திமுக மாணவர் அணி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முதல்வர், திமுக தலைவர் உத்தரவின்படி கீழடி என்கிற பெயரே பா.ஜ.க அரசுக்கு வேப்பங்காயாகக் கசக்கிறது. கீழடி ஆய்வை மேற்கொள்ளவே நீதிமன்றத்தை நாடவேண்டியிருந்தது.

அகழாய்வை மேற்கொண்ட அதிகாரிகள் பா.ஜ.க-வின் குரலாக ஒலிக்கவில்லை என்பதற்காக அவர்கள் தூக்கி எறியப்பட்டார்கள்.

கடந்தகால எடப்பாடி அரசும் பா.ஜ.க-வினரின் பேச்சைக் கேட்டுக்கொண்டு கீழடி அகழாய்வைக் கிடப்பில் போட்டது. தமிழ்நாட்டில் திமுக தலைவர் தலைமையிலான அரசு அமைந்ததும் கீழடி அகழாய்வுக்குப் புத்துயிர் கொடுத்ததோடு துரிதமாக பலகட்ட ஆய்வுகள் நடத்தி அருங்காட்சியகத்தையும் கட்டியெழுப்பினார்.

கடன் வசூலில் இம்சை செய்தால் 5 ஆண்டு சிறை, ரூ. 5 லட்சம் அபராதம்! ஆளுநர் ஒப்புதல்!

அறிவியல்பூர்வமாக கீழடி அகழாய்வுகள் நிரூபிக்கப்பட்ட பிறகும் அதை ஏற்று ஆய்வை வெளியிட மறுக்கும் தமிழர் விரோத பா.ஜ.க அரசைக் கண்டித்து வருகிற ஜூன் 18ஆம் தேதி காலை 10 மணிக்கு தி.மு.க. மாணவர் அணி சார்பில், “மதுரை, வீரகனூர் சுற்றுச்சாலை”யில் “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்” நடைபெறும்.

இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில், கட்சி மாணவர் அணியின் மாநில நிர்வாகிகள் - மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட நிர்வாகிகள் மற்றும் கல்லூரி மாணவர் அமைப்பின் நிர்வாகிகள் அவர்களது தோழர்களுடன் பெருந்திரளாக பங்கேற்று, போராட்டத்தை வெற்றியடையச் செய்ய அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு! பயணிகள் குளிக்கத் தடை!

குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. கடந்த 2 தினங்களாக ... மேலும் பார்க்க

புதுப்பொலிவில் கல்லணை! வரலாற்றில் முதல்முறையாக முதல்வர் நாளை திறந்து வைக்கிறார்!!

டெல்டா பாசனத்துக்காக, மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், நாளை கல்லணையிலிருந்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தண்ணீர் திறந்துவைக்கவிருப்பதால் வர்ணம் பூசப்பட்டு புதுப் பொலிவுடன் காட்ச... மேலும் பார்க்க

கோவையில் பைக் மீது டிப்பர் லாரி மோதியதில் தந்தை, மகன் பலி!

கோவை : கோவையில் பைக் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் தந்தை, மகன் பரிதாபமாக பலியாகினர். மகனை ஸ்கேட்டிங் பயிற்சிக்கு அழைத்துச் சென்ற போது விபத்தில் சிக்கியுள்ளனர்.ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் மெனுமெட... மேலும் பார்க்க

தமிழகத்தில் பகல் 1 மணி வரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் இன்று பகல் 1 மணி வரை 7 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை மே மாத இறுதியில் தொடங்கி, ஜூன் மாதம் இரண்டா... மேலும் பார்க்க

நாட்டுப்புற பாடகி கொல்லங்குடி கருப்பாயி காலமானார்!

சிவகங்கை: நாட்டுப்புற பாடகியும், பல்வேறு திரைப்படங்களில் நடித்தவருமான கொல்லங்குடி கருப்பாயி (99) உடல் நலக்குறைவால் இன்று காலமானார்.சிவகங்கை மாவட்டம் கொல்லங்குடியில் உள்ள அவரது இல்லத்தில் வயது மூப்பால்... மேலும் பார்க்க

அமராவதி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள அமராவதி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள அமராவதி அணைக்கு நீர் வரத்து அதிகரித்துக் ... மேலும் பார்க்க