செய்திகள் :

இனிமேல் பவுண்டரிக்கு வெளியே கேட்ச் இல்லை..! எம்சிசியின் புதிய விதிமுறை!

post image

எம்சிசியின் புதிய விதிமுறையின்படி இனிமேல் பவுண்டரிக்கு வெளியே பந்தினை கேட்ச் பிடிப்பது ரத்து செய்யப்பட்டுள்ளது.

கிரிக்கெட்டில் தற்போதைய விதிமுறையின்படி முதல்முறை பந்தினை தொடுவது பவுன்டரி எல்லைக்குள் இருந்தால் போதும்.

பிறகு எல்லைக் கோட்டுக்கு வெளியே சென்றாலும் பந்தினை தூக்கிவீசும்போது கால் தரையில் படாமல் எத்தனை முறை வேண்டுமானாலும் பந்தினை தடுக்கலாம்.

பின்னர் மீண்டும் பவுண்டரி லைனுக்குள் வந்து பிடித்தால் அவுட் கொடுக்கப்படும். அது விதிமுறைக்கு உள்பட்டதாகவே இருக்கிறது. இந்த விதியை ’பன்னி-ஹோப்’ என அழைக்கிறோம்.

இந்தமாதிரி பல அற்புதமான கேட்ச்களை பார்த்திருக்கிறோம். ஐபிஎல் போட்டிகளிலும் இது நடந்திருக்கிறது.

’பன்னி-ஹோப்’ கேட்ச் விதி ரத்து

தற்போது, இந்த விதியை எம்சிசி (மெல்போர்ன் கிரிக்கெட் கிளப்) மாற்றவிருப்பதாகக் கூறியுள்ளது.

ஐசிசி (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) உடன் சேர்ந்து இந்த விதியை அடுத்தாண்டு அக்டோபர் முதல் அமலுக்குக் கொண்டுவர இருப்பதாக இஎஸ்பிஎன் தகவல் அளித்துள்ளது. ஆனால், எம்சிசி இந்த மாதமே இந்த விதியை அமல்படுத்தவிருக்கிறது.

இந்த விதி மாற்றம் ஆட்டத்தின் சுவாரசியம், உடற்தகுதியை கெடுப்பதாகவும் தவறானதெனவும் ரசிகர்கள் கருதுகிறார்கள்.

முக்கியமாக 2023 பிக்பாஷ் லீக்கில் மைக்கெல் நசீர் பிடித்த ’பன்னி-ஹோப்’ பாணியிலான கேட்ச் பேசுபொருளானது.

புதிய விதியில் என்ன மாற்றம்?

இந்தப் புதிய விதியில் ஃபீல்டர் வெளியே சென்று பந்தினை தடுத்து அடுத்ததாக பவுண்டரி லைனுக்குள் வந்து கேட்ச்சை நிறைவு செய்ய வேண்டும்.

ஒன்றுக்கு மேற்பட்ட முறை பந்தினை பவுண்டரி எல்லைக்கு வெளியே தொட்டால் அது விக்கெட்டு கொடுக்கப்படாது. மாறாக பவுண்டரி கொடுக்கப்படும்.

இதற்கு முன்பாக இருந்த விதி நியாயமற்றதாக எம்சிசி கருதுவதால் இந்த புதிய விதியை உருவாக்கியுள்ளது.

ஃபீல்டர்கள் இன்னமும் தங்களது அற்புதமான கேட்சை பிடிக்க வாய்ப்பிருக்கிறது. எல்லைக்கோட்டுக்கு வெளியே ஒருமுறைச் சென்று தடுத்துவிட்டு எல்லைக்கோட்டுக்கு உள்ளே வந்து கேட்ச்சை நிறைவு செய்யலாம்.

இது ஃபீல்டர், பேட்டர்களுக்கு நியாயமானதாக இருக்குமெனக் கூறப்படுகிறது.

டெம்பா என்பதன் பொருள் என்ன தெரியுமா? டெம்பா பவுமா விளக்கம்!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி டெம்பா பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்க அணி சாம்பியன் பட்டம் வென்றது.ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே லார்ட்ஸ் திட... மேலும் பார்க்க

கேப்டனாக ஆதிக்கம் செலுத்தும் டெம்பா பவுமா!

டெஸ்ட் போட்டிகளில் தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறார்.ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே லார்ட்ஸ் திடலில் நடைபெற்று வந்த உலக டெஸ்ட் சா... மேலும் பார்க்க

முதல் இன்னிங்ஸில் ஜீரோ, இரண்டாவது இன்னிங்ஸில் ஹீரோ; ஆட்ட நாயகன் மார்க்ரம்!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்க அணி சாம்பியன் பட்டம் வென்றது.ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான உ... மேலும் பார்க்க

முடிவுக்கு வந்த 27 ஆண்டுகள் காத்திருப்பு; தென்னாப்பிரிக்கா சாம்பியன்!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தென்னாப்பிரிக்க அணி சாம்பியன் பட்டம் வென்றது.282 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடிய தென்னாப்பி... மேலும் பார்க்க

நம்பிக்கை அளிக்கும் மிட்செல் ஸ்டார்க்: இறுதிக் கட்டத்தில் தென்னாப்பிரிக்கா!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி மிட்செல் ஸ்டார் இன்னமும் நம்பிக்கையை அளிக்கும் விதமாக பந்துவீசி வருகிறார். முதல் இன்னிங்ஸில் ஆஸி. 212க்கு ஆட்டமிழக்க, தெ.ஆ. 138க்கு ஆட்டமிழந்தது.இரண்டாம் இன்னிங... மேலும் பார்க்க

ஷுப்மன் கில் இடத்தில் நான் இருந்தால்... ரவிச்சந்திரன் அஸ்வின் கூறுவதென்ன?

டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ஷுப்மன் கில் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பேசியுள்ளார்.இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ட... மேலும் பார்க்க