இன்றைய ராசிபலன் | Indraya Rasi palan | June 15 | Today Rasi palan | Astrology | ...
குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு! பயணிகள் குளிக்கத் தடை!
குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. கடந்த 2 தினங்களாக குளிக்கத் தடை விதிக்கப்பட்ட நிலையில் இன்றும் அருவிகளில் தண்ணீர் ஆர்பரித்துக் கொட்டுவதால் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிரதான அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகமாக இருக்கிறது.
தென்காசி மாவட்டம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் லேசான சாரல் மழை அவ்வப்போது பெய்து வருகிறது.
தற்போது ஐந்தருவியில் தண்ணீர் வரத்து சற்று குறைந்துள்ளதால் அங்கு மட்டும் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.