செய்திகள் :

கோவையில் பைக் மீது டிப்பர் லாரி மோதியதில் தந்தை, மகன் பலி!

post image

கோவை : கோவையில் பைக் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் தந்தை, மகன் பரிதாபமாக பலியாகினர். மகனை ஸ்கேட்டிங் பயிற்சிக்கு அழைத்துச் சென்ற போது விபத்தில் சிக்கியுள்ளனர்.

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் மெனுமெட்ஷா சூரிய நாராயணன் என்பவரின் மகன் மெனுமெட்ஷா ராஜேஷ் (39). இவர் கோவை ஞானாம்பிகை மில்ஸ் பகுதியில் உள்ள தனியார் அபார்ட்மெண்டில் குடும்பத்தோடு வசித்து வந்தார். மெனுமெட்ஷா ராஜேஷ் கீரநத்தம் பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் நிறுவனத்தில் இன்ஜினியராக பணி புரிந்து வந்தார். இவரது மகன் மெனுமெட்ஷா வினித் வர்மா (9) தனியார் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்தார்.

மெனுமெட்ஷா வினித் வர்மா காளப்பட்டி பகுதியில் உள்ள தனியார் விளையாட்ரங்கில் ஸ்கேட்டிங் பயிற்சி மேற்கொண்டு வந்தார்.

இதற்காக தினமும் காலையில் தந்தை மெனுமெட்ஷா ராஜேஷ் தனது மகன் மெனுமெட்ஷா வினித் வர்மாவை தனது பைக்கில் அழைத்துச் சென்று விட்டு பயிற்சி முடிந்தவுடன் வீட்டிற்கு அழைத்து வருவது வழக்கம்.

அதற்காக இன்று காலை 5 மணியளவில் மெனுமெட்ஷா ராஜேஷ் தனது மகன் மெனுமெட்ஷா வினித் வர்மாவுடன் சக்தி சாலை பகுதியில் சரவணம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தார்.

சரவணம்பட்டி காளப்பட்டி சாலை சந்திப்பில் மெனுமெட்ஷா ராஜேஷ் திருப்பும் போது பின்னால் அதிவேகமாக வந்த டிப்பர் லாரி ஒன்று இருசக்கர வாகனத்தில் மீது மோதியது.இதில் மெனுமெட்ஷா ராஜேஷ் அவரது மகன் மெனுமெட்ஷா வினித் வர்மா ஆகிய இருவரும் டிப்பர் லாரி சக்கரத்தில் சிக்கினர்.

அதிகாலை நேரம் என்பதால் போக்குவரத்து இல்லாமல் இருந்தது. அவர்கள் அலறி துடிப்பதை பார்த்த அங்கு இருந்தவர்கள் ஓடி வந்து ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர்.

ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வருவதற்குள் தந்தை, மகன் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இது பற்றி தகவல் அறிந்த போக்குவரத்து கிழக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மெனுமெட்ஷா ராஜேஷ் மற்றும் அவரது மகன் மெனுமெட்ஷா வினித் வர்மா உடலை கைப்பற்றி உடல் கூறதாய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பிறகு டிப்பர் லாரி ஓட்டுநரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவையில் இன்று அதிகாலை நடைபெற்ற சாலை விபத்தில் தந்தை, மகன் இருவரும் பரிதாபமாக இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

வாசிப்பு இயக்க புத்தகங்களில் மாணவா்களின் படைப்புகள் பள்ளிக் கல்வித் துறை தகவல்

பள்ளிக் கல்வித் துறையின் வாசிப்பு இயக்கத்தின் சாா்பில் 4-ஆம் கட்டமாக புத்தகங்கள் உருவாக்கப்படவுள்ள நிலையில், இந்தப் புத்தகங்கள் அனைத்தும் மாணவா்களின் படைப்புகளாகக் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. இந்த... மேலும் பார்க்க

காா் ஓட்டுநா் கொலை வழக்கு: 6 பேரின் ஆயுள் தண்டனையை ரத்து -உயா்நீதிமன்றம்

மகளுடன் திருமண பந்தத்தை தாண்டிய உறவில் இருந்ததாக வந்த வதந்தி காரணமாக காா் ஓட்டுநரைக் கொலை செய்த வழக்கில் தந்தை, மகன் உள்ளிட்ட 6 பேருக்கு விதித்த ஆயுள் தண்டனையை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் தீா்ப... மேலும் பார்க்க

உலகளாவிய சூரிய சக்தி காா் போட்டியில் சென்னை ஐஐடி குழுவின் ‘ஆக்னேயா’ காா்

உலகின் முன்னணி கண்டுபிடிப்புடன் சூரிய சக்தி காா் ரேஸ் சவாலுக்கான ‘பிரிட்ஜ்ஸ்டோன் வோ்ல்ட் சோலாா் சேலஞ்ச் 2025’ என்கிற நிகழ்வு ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள நிலையில் அதில் சென்னை ஐஐடி-இன் புத்தாக்க மையத்... மேலும் பார்க்க

சென்னையில் சதமடித்த வெய்யில்!

சென்னை: சென்னையில் கடந்த சில நாள்களாக மாலையில் பெய்த மழையால் வெப்பம் தணிந்து காணப்பட்டது. இந்த நிலையில், வெள்ளி, சனி ஆகிய இரு நாள்களும் வெய்யில் சுட்டெரித்தது.தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் சனிக்கி... மேலும் பார்க்க

ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல் ஒரு பொறுப்பற்ற செயல்: முதல்வர் ஸ்டாலின்

ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல் ஒரு பொறுப்பற்ற செயல் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில், ஈரான் மீது இஸ்ரேல் தொடுத்து வரும் தாக்குதல்கள் பெரு... மேலும் பார்க்க

நீட் தேர்வுக்கெதிரான பொய் பிரசாரங்களை திமுக இனியாவது நிறுத்த வேண்டும்: அண்ணாமலை

நீட் தேர்வுக்கெதிரான பொய் பிரசாரங்களை திமுக இனியாவது நிறுத்த வேண்டும் என பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், நீட் தேர்வில், தமிழகத்தில் தேர்வெ... மேலும் பார்க்க