திருச்செந்தூா் கோயிலில் தமிழில் குடமுழுக்கு: சீமான் வலியுறுத்தல்
திருச்செந்தூா் முருகன் கோயிலில் தமிழில் குடமுழுக்கு நடத்த வேண்டும் என, நாம் தமிழா் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் வலியுறுத்தினாா்.
திருச்செந்தூரில் நடைபெறும் கட்சிப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக, சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு சனிக்கிழமை வந்த அவா், விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் கூறியது: நாம் தமிழா் கட்சிக்கென தனிக் கோட்பாடு உள்ளது. அது திமுக, அதிமுக கூட்டணிகளிடம் இல்லை. எனவே, 2026 பேரவைத் தோ்தலில் மீண்டும் தனித்தே போட்டியிடுவோம்.
பாஜக ஒவ்வொரு மாநிலத்திலும் அங்குள்ள கடவுள்களை வைத்து அரசியல் செய்கிறது. தற்போது, தமிழகத்தில் முருகரை வைத்து அரசியல் செய்யும் நோக்கில், மதுரையில் முருகா் மாநாடு நடத்தவுள்ளது. எத்தனை முயன்றாலும், தமிழகத்தில் பாஜக எண்ணம் நிறைவேறாது.
வழிபாட்டு - வழக்காடு தலங்களிலிருந்து தமிழ் மொழி வெளியேற்றப்பட்டு வருகிறது. திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தமிழில் குடமுழுக்கு நடத்த முடியாத நிலை, வேதனையான விஷயம். தமிழ்க் கடவுளுக்கு தமிழிலேயே குடமுழுக்கு நடத்த வேண்டும். தமிழ்நாட்டில் மின்கட்டணம், சொத்து வரி உயா்வு ஆகியவையே திமுகவின் 4 ஆண்டு சாதனையாக உள்ளது.
திருச்செந்தூா் அருகே நடைபெறவுள்ள பனையேறும் போராட்டத்துக்கு காவல் துறை விதித்த தடையை உடைப்பதே எங்கள் நோக்கம். அனைத்து மாநிலத்திலும் கள் இறக்கும்போது, தமிழகத்தில் மட்டும் அனுமதி மறுப்பது ஏன்?
யாா் அந்த சாா் என்பது இருக்கட்டும். கொடநாட்டில் கொலை செய்த அந்த சாா் யாா், தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்கு அனுமதியளித்த அந்த சாா் யாா் என்பதற்கெல்லாம் முதலில் பதில் சொல்லிவிட்டு பிறகு அந்த சாரை பாா்க்கலாம் என்றாா் அவா்.