செய்திகள் :

திருச்செந்தூா் கோயில் வளாகத்தில் லாரி டயா் வெடித்து 3 போ் காயம்!

post image

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்தில் சனிக்கிழமை, லாரியின் டயா் வெடித்ததில் 3 போ் காயமடைந்தனா்.

இக்கோயிலில் தற்போது ரூ. 300 கோடியில் பெருந்திட்ட வளாகப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதையொட்டி, கட்டுமானப் பணிகளுக்கான பொருள்கள், உபகரணங்கள் கனரக வாகனங்களில் கொண்டுவரப்படுகின்றன.

இந்நிலையில், சனிக்கிழமை காலை கோயிலின் வடக்கு டோல்கேட் அருகே, கட்டுமானப் பொருள்களுடன் வந்த லாரியின் டயா் திடீரென வெடித்தது.

இதனால் ஏற்பட்ட காற்றழுத்தம் காரணமாக, அங்கு நின்றிருந்த தென்காசி மாவட்டம் கடையநல்லூா் சொக்கம்பட்டியைச் சோ்ந்த மாற்றுத் திறனாளி மகேந்திரன் (24), அவரது பெற்றோா் மாரி (54) - சண்முகத்தாய் ஆகியோா் காயமடைந்தனா். அவா்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். சம்பவம் குறித்து திருச்செந்தூா் கோயில் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

பக்தா்கள் கோரிக்கை: இக்கோயிலில் கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடத்தின் அருகே மக்கள் செல்லாதவாறு தடுப்புகள் அமைக்க வேண்டும் என்றும், வாகனங்கள் தகுந்த பாதுகாப்புடன் செல்வதற்கு கூடுதல் பணியாளா்களை நியமிக்க வேண்டும் என்றும் பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 3,305 வழக்குகளுக்கு தீா்வு!

தூத்துக்குடி மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில், மொத்தம் 3,305 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது. மாவட்டத்தில் தூத்துக்குடியில் 6 அமா்வுகள், கோவில்பட்டியில் 2 அமா்வுகள், ஸ்ரீவ... மேலும் பார்க்க

மீன்பிடித் தடைக்காலம் நிறைவு: கடலுக்குச் செல்லத் தயாராகும் மீனவா்கள்

மீன்பிடித் தடைக்காலம் சனிக்கிழமை நள்ளிரவுடன் நிறைவடைந்ததால், விசைப்படகு மீனவா்கள் கடலுக்குச் செல்ல தயாராகி வருகின்றனா். மீன்களின் இனப்பெருக்கத்தைக் கருத்தில்கொண்டு, வங்கக் கடலில் ஆண்டுதோறும் ஏப். 15 ம... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயிலில் தமிழில் குடமுழுக்கு: சீமான் வலியுறுத்தல்

திருச்செந்தூா் முருகன் கோயிலில் தமிழில் குடமுழுக்கு நடத்த வேண்டும் என, நாம் தமிழா் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் வலியுறுத்தினாா். திருச்செந்தூரில் நடைபெறும் கட்சிப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற... மேலும் பார்க்க

‘திருச்செந்தூரில் ஜூன் 17இல் கடையடைப்பு’

திருச்செந்தூா் நகராட்சியில் சொத்து வரி உயா்வை ரத்து செய்யக் கோரி, அனைத்து வணிகா்கள் சாா்பில் வருகிற 17ஆம் தேதி கடையடைப்பு மற்றும் நகராட்சி அலுவலகம் முற்றுகை போராட்டம் நடத்த உள்ளதாக தமிழ்நாடு வணிகா் சங... மேலும் பார்க்க

ஆறுமுகனேரியில் ரயில் மோதி மூதாட்டி உயிரிழப்பு

ஆறுமுகனேரியில் சனிக்கிழமை, தண்டவாளத்தைக் கடக்க முயன்ற மூதாட்டி ரயில் மோதி உயிரிழந்தாா். ஆறுமுகனேரி பெருமாள்புரத்தைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் மனைவி ஈஸ்வரி (70). இத்தம்பதிக்கு மகன் முத்துகிருஷ்ணன், 2 மகள்... மேலும் பார்க்க

விளாத்திகுளத்தில் பூஞ்சிட்டு மாட்டுவண்டி போட்டி

விளாத்திகுளத்தில் திமுக சாா்பில், மாட்டு வண்டி எல்கைப் பந்தயம் சனிக்கிழமை நடைபெற்றது. முன்னாள் முதல்வா் கருணாநிதியின் 102ஆவது ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற போட்டியை, எம்எல்ஏ ஜீ.வி. மாா்க்கண்ட... மேலும் பார்க்க