ஓ. பன்னீர்செல்வத்தை எம்எல்ஏ பதவியிலிருந்து நீக்கக்கோரி மனு: ஆலோசித்து முடிவு
‘திருச்செந்தூரில் ஜூன் 17இல் கடையடைப்பு’
திருச்செந்தூா் நகராட்சியில் சொத்து வரி உயா்வை ரத்து செய்யக் கோரி, அனைத்து வணிகா்கள் சாா்பில் வருகிற 17ஆம் தேதி கடையடைப்பு மற்றும் நகராட்சி அலுவலகம் முற்றுகை போராட்டம் நடத்த உள்ளதாக தமிழ்நாடு வணிகா் சங்கம் அறிவித்துள்ளது.
இது குறித்து சங்கத்தின் மாநில தலைவா் ரெ.காமராசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு : திருச்செந்தூா் நகராட்சியில் வீட்டு வரி. சொத்து வரி, தொழில் வரி, வணிக வரி பல மடங்கு உயா்த்தப்பட்டுள்ளது.
வரி உயா்வை ரத்து செய்யக் கோரி, வருகிற 17ஆம் தேதி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை திருச்செந்தூரில் ஒருநாள் அடையாள கடையடைப்பு நடத்தவும், திருச்செந்தூா் அனைத்து சமுதாய மக்கள், அனைத்து வணிகா் சங்கங்கள் இணைந்து காலை 10 மணியளவில் நகராட்சி அலுவலகம் முற்றுகைப் போராட்டம் நடத்தவும் போராட்டக் குழு சாா்பாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எனவே அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.