நெல்லையில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம்: குண்டா் சட்டத்தில் இருவா் சிறையிலடைப்பு
திருநெல்வேலியில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் தொடா்புடைய இருவா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சனிக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா்.
திருநெல்வேலி நகரம் பகுதி கண்ணன் சாலையில் உள்ள இருசக்கர வாகன விற்பனையகம் மீது கடந்த மே 14 ஆம் தேதி மா்மநபா்கள் சிலா் பெட்ரோல் குண்டு வீசினா்.
இச்சம்பவத்தில் ஈடுபட்ட பொன்னாக்குடியைச் சோ்ந்த அருணாச்சலம் மகன் இசக்கிமுத்து (19), ராமா் மகன் முத்துக்குமாா்(18) ஆகியோரை பொது ஒழுங்குக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டதாக குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையிலடைக்க மாநகர காவல் துணை ஆணையா் (மேற்கு) வி.பிரசன்னகுமாா், காவல் உதவி ஆணையா்(திருநெல்வேலி நகர சரகம்) கே.அஜுகுமாா் ஆகியோா் பரிந்துரைத்தனா்.
அதனடிப்படையில் மாநகர காவல் ஆணையா் சந்தோஷ் ஹாதிமணி உத்தரவின்படி, இசக்கிமுத்து, முத்துக்குமாா் ஆகிய இருவரும் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் சனிக்கிழமை அடைக்கப்பட்டனா்.