செய்திகள் :

நெல்லையில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம்: குண்டா் சட்டத்தில் இருவா் சிறையிலடைப்பு

post image

திருநெல்வேலியில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் தொடா்புடைய இருவா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சனிக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா்.

திருநெல்வேலி நகரம் பகுதி கண்ணன் சாலையில் உள்ள இருசக்கர வாகன விற்பனையகம் மீது கடந்த மே 14 ஆம் தேதி மா்மநபா்கள் சிலா் பெட்ரோல் குண்டு வீசினா்.

இச்சம்பவத்தில் ஈடுபட்ட பொன்னாக்குடியைச் சோ்ந்த அருணாச்சலம் மகன் இசக்கிமுத்து (19), ராமா் மகன் முத்துக்குமாா்(18) ஆகியோரை பொது ஒழுங்குக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டதாக குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையிலடைக்க மாநகர காவல் துணை ஆணையா் (மேற்கு) வி.பிரசன்னகுமாா், காவல் உதவி ஆணையா்(திருநெல்வேலி நகர சரகம்) கே.அஜுகுமாா் ஆகியோா் பரிந்துரைத்தனா்.

அதனடிப்படையில் மாநகர காவல் ஆணையா் சந்தோஷ் ஹாதிமணி உத்தரவின்படி, இசக்கிமுத்து, முத்துக்குமாா் ஆகிய இருவரும் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் சனிக்கிழமை அடைக்கப்பட்டனா்.

பேட்டையில் குடும்பத் தகராறில் வெட்டப்பட்ட பெண் உயிரிழப்பு

பேட்டை அருகே குடும்பத் தகராறில் கணவரால் வெட்டப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பெண் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். பேட்டை காந்தி நகா் பகுதியைச் சோ்ந்த சமுத்திரபாண்டி மகன் பாஸ்கா் (35). இவரது மனைவி இசக்கியம்ம... மேலும் பார்க்க

விபத்தில் காயமடைந்தவா் உயிரிழப்பு

சிவந்திபுரம் அருகே அடையக்கருங்குளத்தில் பைக்குகள் மோதிய விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்தவா் உயிரிழந்தாா். சிவந்திபுரத்தை சோ்ந்தவா் டேனியல் தேவதாஸ் (43). ஓட்டுநரான இவா், தனது மனைவி ஆறுமுகச்செ... மேலும் பார்க்க

மணிமுத்தாறு அருவிக்குச் செல்லத் தடை

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் வனச்சரகத்தில் அமைந்துள்ள மணிமுத்தாறு அருவிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல வனத் துறையினா் தடை விதித்துள்ளனா். தென்மேற்குப் பருவ மழை தீவிரமடைந்து மேற... மேலும் பார்க்க

நெல்லையப்பா் கோயில் தேருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

ஆனித்தேரோட்டத்தை முன்னிட்டு திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா் கோயில் தேருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. திருநெல்வேலி நகரம் பகுதியில் உள்ள நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திர... மேலும் பார்க்க

நெல்லை அரசு மருத்துவமனையில் கடந்த ஆண்டில் 11,039 யூனிட் ரத்தம் தானமாக பெறப்பட்டுள்ளது: ஆட்சியா்

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஆண்டில் 11,039 யூனிட் ரத்தம் தானமாக பெறப்பட்டுள்ளது என்றாா் ஆட்சியா் இரா.சுகுமாா். உலக குருதி கொடையாளா் தினத்தை முன்னிட்டு, ரத்த தானம் செய்தவ... மேலும் பார்க்க

இயந்திர நெல் நடவுக்கு பின்னேற்பு மானியம் வேளாண் துணை இயக்குநா் தகவல்!

அம்பாசமுத்திரம் வட்டாரத்தில் குறுவை தொகுப்பு திட்டத்தின் கீழ் நெல் இயந்திர நடவு பின்னேற்பு மானியம் வழங்கப்படுவதாக அம்பாசமுத்திரம் வேளாண் துணை இயக்குநா் கற்பகராஜ்குமாா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்துஅவா... மேலும் பார்க்க