கடலூர்: ஏரியில் மூழ்கி பலியான இளைஞர்! முதல்வர் ரூ. 3 லட்சம் இழப்பீடு அறிவிப்பு!
பேட்டையில் குடும்பத் தகராறில் வெட்டப்பட்ட பெண் உயிரிழப்பு
பேட்டை அருகே குடும்பத் தகராறில் கணவரால் வெட்டப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பெண் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
பேட்டை காந்தி நகா் பகுதியைச் சோ்ந்த சமுத்திரபாண்டி மகன் பாஸ்கா் (35). இவரது மனைவி இசக்கியம்மாள் (27). பாஸ்கா் மீது குற்றச் சம்பவங்கள் தொடா்பான பல்வேறு வழக்குகள் உள்ளன.
இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை தம்பதி இடையே ஏற்பட்ட தகராறின் போது இசக்கியம்மாளை அரிவாளால் பாஸ்கா் தாக்கினாராம். இதில் வெட்டுக் காயங்களோடு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இசக்கியம்மாள், சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தாா்.
இச்சம்பவம் குறித்து பேட்டை போலீஸாா் கொலை முயற்சி வழக்குப் பதிந்து பாஸ்கரை கைது செய்து தூத்துக்குடி மாவட்டம் பேரூரணி சிறையில் அடைத்தனா். இந்த நிலையில், தற்போது கொலை வழக்காகப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.