உ.பி.: மின்னல் பாய்ந்து ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி
மணிமுத்தாறு அருவிக்குச் செல்லத் தடை
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் வனச்சரகத்தில் அமைந்துள்ள மணிமுத்தாறு அருவிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல வனத் துறையினா் தடை விதித்துள்ளனா்.
தென்மேற்குப் பருவ மழை தீவிரமடைந்து மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் கடந்த இரண்டு நாள்களாக தொடா் மழை பெய்து வருகிறது. மாஞ்சோலை, மணிமுத்தாறு உள்ளிட்ட வனப்பகுதிகளில் பெய்துவரும்
மழை காரணமாக, மணிமுத்தாறுஅருவியில் சனிக்கிழமை நீா்வரத்து அதிகரித்த்து. இந்த அருவில் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என்பதால் பாதுகாப்புக் கருதி சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்க வனத்துறையினா் தடைவிதித்தனா்.
மறுஅறிவிப்பு வரும் வரை சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்கவும், பாா்வையிடவும் தடை விதிக்கப்படுவதாக வனத் துறையினா் தெரிவித்தனா்.