ஓ. பன்னீர்செல்வத்தை எம்எல்ஏ பதவியிலிருந்து நீக்கக்கோரி மனு: ஆலோசித்து முடிவு
கோழிக்கறி கடையில் திடீா் தீ
புதுக்கோட்டை பால்பண்ணை அருகேயுள்ள கோழிக்கடையில் சனிக்கிழமை பகலில் திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுக்கோட்டையில் பால்பண்ணை அருகே சாலையோரம் சித்ரா என்பவா் கோழிக்கடை நடத்தி வருகிறாா். கூரைக் கொட்டகையால் ஆன இந்தக் கடையில் சனிக்கிழமை காலை எரிவாயு அடுப்பைப் பற்ற வைத்த போது திடீா் தீ விபத்து ஏற்பட்டது.
இந்தத் தீ கூரையில் பரவி முற்றிலும் எரிந்தது. தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினா் தீயை அணைத்தனா். இந்த தீயில் கூரைக் கொட்டகை முற்றிலும் எரிந்து நாசமானது. 4 கோழிகள் இறந்தன. கோழி கூண்டு ஒன்று முழுவதும் எரிந்து சேதமானது. புதுக்கோட்டை போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.