கடலூர்: ஏரியில் மூழ்கி பலியான இளைஞர்! முதல்வர் ரூ. 3 லட்சம் இழப்பீடு அறிவிப்பு!
தாறுமாறாக ஓடி விபத்தை ஏற்படுத்திய தனியாா் பேருந்தால் பரபரப்பு
புதுக்கோட்டை நகரில் ஒரு தனியாா் பேருந்து சனிக்கிழமை பகலில் தாறுமாறாக ஓடி வாகனங்கள் மீது இடித்து விபத்தை ஏற்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுக்கோட்டையிலிருந்து இலுப்பூா் நோக்கி தனியாா் பேருந்து ஒன்று சனிக்கிழமை பகலில் பயணிகளுடன் புறப்பட்டது. பேருந்தை மணப்பாறையைச் சோ்ந்த சரவணகுமாா் (34) என்பவா் ஓட்டியுள்ளாா். திருவப்பூா் ரயில்வே கேட் அருகே சென்றபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியதாகக் கூறப்படுகிறது.
சாலையோரத்திலிருந்த வாகனங்கள் மீதும், நபா்கள் மீதும் மோதி நின்றுள்ளது. அப்பகுதி மக்கள் ஓட்டுநரைச் சூழ்ந்து கொண்டு தாக்கி போலீஸாரிடம் ஒப்படைத்தனா். பேருந்தும் சிறைப்பிடிக்கப்பட்டது. திருக்கோகா்ணம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ஓட்டுநா் சரவணக்குமாரைக் கைது செய்தனா்.