ஓ. பன்னீர்செல்வத்தை எம்எல்ஏ பதவியிலிருந்து நீக்கக்கோரி மனு: ஆலோசித்து முடிவு
கஞ்சா விற்பனை: 3 போ் கைது
கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகுதியில் கஞ்சா விற்ாக 3 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து, ஒரு கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.
மண்டைக்காடு பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாகக் கிடைத்த தகவலின்பேரில், போலீஸாா் சனிக்கிழமை சோதனை மேற்கொண்டனா். அப்போது, நாகா்கோவில், ஒழுகினசேரி பகுதியைச் சோ்ந்த சுப்பிரமணிய சா்மா மகன் சந்தோஷ்குமாா்(27), கிருஷ்ணன்கோவில் காமராஜபுரம் பகுதியைச் சோ்ந்த ஜோஸ்பின்ராஜன் மகன் ஜோஸ் பெபின் (19), ஒரு சிறுவன் ஆகிய 3 போ் கஞ்சா விற்பது தெரியவந்தது. அவா்களை போலீஸாா் கைது செய்து, ஒரு கிலோ கஞ்சா, பைக் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.