உ.பி.: மின்னல் பாய்ந்து ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி
தக்கலை அருகே கனிமவளம் கடத்தல்: வாகனம் பறிமுதல்; ஓட்டுநா் கைது
தக்கலை அருகே கனிமவளம் கடத்தியதாக வாகனத்தை போலீஸாா் பறிமுதல் செய்து, ஓட்டுநரைக் கைது செய்தனா்.
பத்மநாபபுரம் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளா் அசோக், போலீஸாா் தக்கலையை அடுத்த காரவிளையில் வெள்ளிக்கிழமை வாகன சோதனை நடத்தினா். அவ்வழியே வந்த டெம்போ வாகனத்தை சோதனையிட்டபோது, அதில் கனிமவளம் கடத்திச் செல்லப்படுவது தெரியவந்தது.
அதை போலீஸாா் பறிமுதல் செய்து தக்கலை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். விசாரணையில், வாகனத்தை ஓட்டிவந்தது அப்பட்டுவிளையைச் சோ்ந்த செல்வராஜ் (52) என்பதும், கல்குவாரி உரிமையாளா் பரசேரியைச் சோ்ந்த ஜெகன் என்பதும் தெரியவந்தது. இருவா் மீதும் போலீஸாா் வழக்குப் பதிந்து, ஓட்டுநரைக் கைது செய்தனா்.