குமரி மாவட்டத்தில் பலத்த மழை: கோதையாறு மின்நிலையப் பகுதியில் நிலச்சரிவு! ஜெனரேட்டா், கட்டடங்கள் சேதம்!
குமரி மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வரும் நிலையில் கோதையாறு மின்நிலைய வளாகத்தில் நிலச்சரிவு ஏற்பட்டு பாறைகள் உடைந்து விழுந்ததில் ஜெனரேட்டா் மற்றும் கட்டடங்கள் சனிக்கிழமை சேதமடைந்தன.
குமரி மாவட்டம் கீழ் கோதையாறு பகுதியில், கோதையாறு-1, கோதையாறு-2 என இரு நீா்மின் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த மின்நிலையங்கள்
மலை சூழ்ந்த இடத்தில் அமைந்துள்ளன. இதில் கோதையாறு-1 மின்நிலையம், செங்குந்தான மலையின் கீழ்ப் பகுதியில் அமைந்துள்ளது. இந்த மின்நிலையத்தின் உற்பத்தித் திறனை அதிகரிக்கும் வகையில், மறுகட்டமைப்பு பணிகள் இங்கு நடைபெற்று வருகின்றன.
பலத்த மழையால் நிலச்சரிவு: இதனிடையே, மாவட்டத்தில் கடந்த இரு நாள்களாக மலைப் பகுதிகளில் பருவமழை தீவிரமடைந்துள்ளது.
சனிக்கிழமை காலை பெய்த பலத்த மழை காரணமாக, கோதையாறு-1 மின் நிலையத்தில், மேல்கோதையாறுக்கு செல்லும் விஞ்ச் பாதையை அருகே நிலச்சரிவு ஏற்பட்டது. மலையிலிருந்து பாறைகள் உடைந்து விழுந்தன. மேலும் மரங்களும் முறிந்து விழுந்ததோடு, சேறும் சகதியுமாக அப்பகுதி காணப்பட்டது.
இதில், மறுகட்டமைப்பு பணிகளுக்காக அப் பகுதியில் வைக்கப்பட்டிருந்த ஜெனரேட்டா் உடைந்து சேதமானது. இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் கட்டடம், உதிரி இயந்திரம் வைக்கப்பட்டிருந்த கொட்டகை, விஞ்ச் தண்டவாளங்கள் ஆகியன சேதமடைந்தன.
உயிா் தப்பிய போலீஸாா்: நிலச்சரிவு ஏற்பட்டபோது, மின்நிலையத்தில் பாதுகாப்புப் பணியில் போலீஸாரும், மின் ஊழியா்கள் சிலரும் அங்கு இருந்தனா். மலையிலிருந்து பாறைகள் உருண்ட வருவதைப் பாா்த்த போலீஸாா், அங்கிருந்து ஓடி உயிா் தப்பினா். போலீஸாா், மின் ஊழியா்களுக்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்படவில்லை.

இதுகுறித்து தகவலறிந்த மின்நிலைய அலுவலா்கள் நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தைப் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். மேலும் உயா்அதிகாரிகளுக்கும் தகவல்கள் கொடுத்தனா்.