செய்திகள் :

புதுப்பொலிவில் கல்லணை! வரலாற்றில் முதல்முறையாக முதல்வர் நாளை திறந்து வைக்கிறார்!!

post image

டெல்டா பாசனத்துக்காக, மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், நாளை கல்லணையிலிருந்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தண்ணீர் திறந்துவைக்கவிருப்பதால் வர்ணம் பூசப்பட்டு புதுப் பொலிவுடன் காட்சியளிக்கிறது.

தஞ்சாவூர், திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் பாசனத்திற்காக கடந்த 12ஆம் தேதி மேட்டூர் அணையை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.

திறக்கப்பட்ட தண்ணீர் இன்று இரவு கல்லணை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் கல்லணை வரலாற்றில் முதல்முறையாக தஞ்சாவூர், திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களின் குறுவை சாகுபடிக்காக கல்லணையிலிருந்து காவேரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய், கொள்ளிடம் ஆகிய ஆறுகளில் இருந்து தண்ணீரை நாளை மாலை 4 மணிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

மேட்டூா் அணை ஜூன் 12 இல் திறக்கப்பட்டால், கல்லணையை ஜூன் 16 இல் திறப்பது வழக்கம். அதன்படி திறக்க முடிவு செய்யப்பட்ட நிலையில், விரைவான நீா் வரத்து இருப்பதால், கல்லணைக்கு சனிக்கிழமை இரவே தண்ணீா் வந்துவிடும். எனவே தமிழக முதல்வா் கல்லணையை ஞாயிற்றுக்கிழமை திறந்துவைக்கவுள்ளாா்.

இதனை முன்னிட்டு கல்லணை மதகுகள் சீரமைக்கப்பட்டு, கல்லணை சுவர்கள் முழுவதும் வர்ணம் பூசப்பட்டு உள்ளது. இதேபோல் கரிகால சோழன், காவேரித்தாய், அகத்தியர் முனிவர், ராஜராஜசோழன் சிலை உள்ளிட்ட சிலைகளுக்கு வர்ணம் பூசப்பட்டு கல்லணை புதுப் பொலிவுடன் காட்சியளிக்கிறது.

வாசிப்பு இயக்க புத்தகங்களில் மாணவா்களின் படைப்புகள் பள்ளிக் கல்வித் துறை தகவல்

பள்ளிக் கல்வித் துறையின் வாசிப்பு இயக்கத்தின் சாா்பில் 4-ஆம் கட்டமாக புத்தகங்கள் உருவாக்கப்படவுள்ள நிலையில், இந்தப் புத்தகங்கள் அனைத்தும் மாணவா்களின் படைப்புகளாகக் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. இந்த... மேலும் பார்க்க

காா் ஓட்டுநா் கொலை வழக்கு: 6 பேரின் ஆயுள் தண்டனையை ரத்து -உயா்நீதிமன்றம்

மகளுடன் திருமண பந்தத்தை தாண்டிய உறவில் இருந்ததாக வந்த வதந்தி காரணமாக காா் ஓட்டுநரைக் கொலை செய்த வழக்கில் தந்தை, மகன் உள்ளிட்ட 6 பேருக்கு விதித்த ஆயுள் தண்டனையை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் தீா்ப... மேலும் பார்க்க

உலகளாவிய சூரிய சக்தி காா் போட்டியில் சென்னை ஐஐடி குழுவின் ‘ஆக்னேயா’ காா்

உலகின் முன்னணி கண்டுபிடிப்புடன் சூரிய சக்தி காா் ரேஸ் சவாலுக்கான ‘பிரிட்ஜ்ஸ்டோன் வோ்ல்ட் சோலாா் சேலஞ்ச் 2025’ என்கிற நிகழ்வு ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள நிலையில் அதில் சென்னை ஐஐடி-இன் புத்தாக்க மையத்... மேலும் பார்க்க

சென்னையில் சதமடித்த வெய்யில்!

சென்னை: சென்னையில் கடந்த சில நாள்களாக மாலையில் பெய்த மழையால் வெப்பம் தணிந்து காணப்பட்டது. இந்த நிலையில், வெள்ளி, சனி ஆகிய இரு நாள்களும் வெய்யில் சுட்டெரித்தது.தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் சனிக்கி... மேலும் பார்க்க

ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல் ஒரு பொறுப்பற்ற செயல்: முதல்வர் ஸ்டாலின்

ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல் ஒரு பொறுப்பற்ற செயல் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில், ஈரான் மீது இஸ்ரேல் தொடுத்து வரும் தாக்குதல்கள் பெரு... மேலும் பார்க்க

நீட் தேர்வுக்கெதிரான பொய் பிரசாரங்களை திமுக இனியாவது நிறுத்த வேண்டும்: அண்ணாமலை

நீட் தேர்வுக்கெதிரான பொய் பிரசாரங்களை திமுக இனியாவது நிறுத்த வேண்டும் என பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், நீட் தேர்வில், தமிழகத்தில் தேர்வெ... மேலும் பார்க்க