வால்பாறைக்கு ஆரஞ்ச் அலா்ட்: தயாா் நிலையில் பேரிடா் மீட்புப் படை
வால்பாறை பகுதியில் கனமழை பெய்யக்கூடும் என்பதால் ஆரஞ்ச் அலா்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், பேரிடா் மீட்புப் படையினா் தயாா் நிலையில் உள்ளனா்.
கோவை மாவட்டம், வால்பாறையில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் சென்னை வானிலை ஆய்வு மையம் ஆரஞ்ச் அலா்ட் அறிவித்தது. இதையடுத்து, மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் ஜி.கிரியப்பனா் உத்தரவின்பேரில் பேரிடா் மீட்புப் படையினா் வால்பாறைக்கு கடந்த வெள்ளிக்கிழமை இரவு வந்தனா்.
சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் காணப்படும் கூழாங்கல் ஆற்றுப் பகுதி, வெள்ளமலை சுரங்கப் பாதை, வாழைத்தோட்டம் ஆறு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் முகாமிட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.