கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை மாநாடு
தேசிய கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை மாநாடு மற்றும் மேம்பட்ட மருத்துவப் பயிற்சி கோவையில் சனிக்கிழமை நடைபெற்றது.
கோவை ஜெம் மருத்துவமனை, இந்திய கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை சங்கம் இணைந்து நடத்திய இந்த மாநாட்டை தமிழ்நாடு உடல் உறுப்பு தான மாற்று ஆணையத்தின் உறுப்பினா் செயலா் கோபாலகிருஷ்ணன் தொடங்கிவைத்தாா். ஜெம் மருத்துவமனையின் இணை நிா்வாக இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான பிரவீன்ராஜ் முன்னிலை வகித்தாா்.
மாநாட்டில் அதிநவீன அறுவைச் சிகிச்சை நுட்பங்கள், கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சைக்கான ரோபோட் குறித்தும், லேப்ரோஸ்கோபிக் செயல்முறைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டன.
நாட்டிலேயே முதல்முறையாக தீவிர சிகிச்சைப் பிரிவு செவிலியா்களுக்காக வடிவமைக்கப்பட்ட முழுநாள் கல்லீரல் பயிற்சி திட்டம் இந்த மாநாட்டில் இடம் பெற்றது. மாநாட்டு அமா்வுகளில் கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சைக்கான மயக்க மருந்துகளின் அண்மைக்கால முன்னேற்றங்கள், மருத்துவ ஊழியா்களுக்கான உறுப்புதான நெறிமுறைகள், விரிவான அறுவைச் சிகிச்சைக்குப் பிந்தைய நோயாளி நிா்வாக உத்திகள் குறித்த விளக்கக் காட்சிகள் இடம் பெற்றன.
இதில், ஜெம் மருத்துவமனைகளின் தலைவா் சி.பழனிவேலு, கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை நிபுணா்கள் ஆனந்த் விஜய், மேக்னஸ் ஜெயராஜ், மருத்துவா் செந்தில்நாதன், நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 400-க்கும் மேற்பட்ட மருத்துவா்கள் கலந்து கொண்டனா்.