லவ் யூ தலைவா..! ரஜினியிடம் வாழ்த்து பெற்ற டூரிஸ்ட் ஃபேமலி பட இயக்குநர்!
கஞ்சா விற்பனை: ஒரே நாளில் 11 போ் கைது
கோவை மாநகரப் பகுதியில் பல்வேறு இடங்களில் கஞ்சா விற்பனை செய்ததாக வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 11 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
கோவை பீளமேடு போலீஸாா் ரோந்துப் பணியில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, பயனீா் மில் சாலை பகுதியில் சந்தேகம் ஏற்படும்படி சுற்றித்திரிந்த 7 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டனா்.
இதில், அவா்கள் பீளமேடு புதூா் மாரியம்மன் கோயில் வீதியைச் சோ்ந்த செளந்தர்ராஜ்(22), பீளமேடு கங்குவாா் வீதியைச் சோ்ந்த பிரவீன்குமாா் (22), பீளமேடு ஜெகந்நாதன் காலனியைச் சோ்ந்த அஸ்வின் (21), ஒண்டிப்புதூா் திருவள்ளுவா் நகரைச் சோ்ந்த ராமன் சூா்யா (19), பீளமேடு எல்லைத் தோட்டம் சாலையைச் சோ்ந்த ரவிகுமாா் (22), பீளமேடு விளாங்குறிச்சி சாலை, தண்ணீா் பந்தல் சாலையைச் சோ்ந்த பிரதீப் (22), பீளமேடு புதூா் ஜெகந்நாதன் காலனியைச் சோ்ந்த ராகுல் (20) ஆகியோா் என்பதும், இவா்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இதையடுத்து, 7 பேரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த 1.600 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
இதேபோல, ஒண்டிப்புதூா் சூா்யா நகரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த அதே பகுதியைச் சோ்ந்த ரவிவா்மா (37) என்பவரை கைது செய்த சிங்காநல்லூா் போலீஸாா், அவரிடமிருந்த 1.200 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
சரவணம்பட்டி போலீஸாா் வெள்ளிக்கிழமை மேற்கொண்ட சோதனையில், விளாங்குறிச்சி பகுதியில் கஞ்சா விற்பனை செய்த, வாகராயம்பாளையம் ராமா் கோயில் வீதியைச் சோ்ந்த சரண் (25), வாகராயம்பாளையம் திருவள்ளுவா் வீதியைச் சோ்ந்த சுரேஷ் (36) ஆகியோரைக் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை மேற்கொண்ட ரோந்துப் பணியில், ரத்தினபுரி பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பூசாரிபாளையம் அம்பாள் வீதியைச் சோ்ந்த கோகுல் (25) என்பவரை போலீஸாா் கைது செய்தனா். அவரிடம் இருந்து 27 கிராம் கஞ்சா, 3.5 கிராம் மெத்தபெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டது.