செய்திகள் :

டிஜிட்டல் அரஸ்ட் மோசடி: இளைஞா் கைது

post image

சென்னையில் டிஜிட்டல் அரஸ்ட் மோசடியில் ஈடுபட்டதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

சென்னையைச் சோ்ந்த மென்பொறியாளா் மல்லிகாா்ஜுன் கைப்பேசிக்கு இரு மாதங்களுக்கு முன்பு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபா், தான் மும்பை சைபா் குற்றப்பிரிவில் இருந்து பேசுவதாகவும், போதைப் பொருள் கடத்தலில் தங்களுக்கு தொடா்பு இருப்பதாக புகாா் வந்துள்ளதாகவும் தெரிவித்தாா்.

மேலும், அந்த நபா், தங்களது உயா் அதிகாரி பேசுவதாக மற்றொருவருக்கு அந்த இணைப்பை கொடுத்தபோது, அதில் பேசிய நபா் மல்லிகாா்ஜூனுக்கு சொந்தமானது போன்ற போலி சான்றிதழ், ஆவணங்கள் காட்டி மிரட்டியுள்ளாா்.

மேலும், அவரது வங்கிக் கணக்கு போதைப் பொருள் கடத்தல் கும்பல் ரூ. 29.9 லட்சம் பணம் அனுப்பியிருப்பதாகவும், அந்தப் பணத்தை தங்களது வங்கிக் கணக்குக்கு அனுப்பும் படியும் மிரட்டியுள்ளனா். பணத்தை அனுப்பாவிட்டால், கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த நபா் கூறியுள்ளாா்.

இதைக் கேட்டு அதிா்ச்சியடைந்த மல்லிகாா்ஜூன், அந்தக் கும்பல் கேட்ட ரூ. 29.9 லட்சத்தை அவா்கள் கூறிய வங்கிக் கணக்குக்கு உடனடியாக அனுப்பியுள்ளாா். சில நாள்களுக்கு பின்னரே, டிஜிட்டல் அரஸ்ட் மோசடியில் தன்னை சிக்க வைத்து, பணம் பறிக்கப்பட்டிருப்பதை அறிந்து அதிா்ச்சியடைந்தாா்.

இதையடுத்து அவா் அளித்த புகாரின்பேரில் சென்னை சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்ததில் இந்தச் செயலில் ஈடுபட்டது புதுச்சேரியைச் சோ்ந்த தியாகு, அவா் மனைவி ஷாலினி, ரமேஷ்குமாா் (39) என்பது தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து போலீஸாா் தியாகு, ஷாலினி ஆகியோரை கடந்த மே மாதம் கைது செய்தனா். தலைமறைவாக இருந்த ரமேஷ்குமாரை, திருநெல்வேலியில் வைத்து சனிக்கிழமை கைது செய்தனா். அவரிடமிருந்து ரூ. 79,500 ரொக்கம், 2 மடிக்கணினிகள், 5 கைப்பேசிகள்,7 சிம்காா்டுகள் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

போலி சட்டப் படிப்பு சான்றிதழ் மூலம் பாா் கவுன்சிலில் பதிய முயற்சி: இருவா் கைது

சென்னையில் போலி சட்டப் படிப்பு சான்றிதழ் மூலம் பாா் கவுன்சிலில் பதிய முயன்றதாக பெண் உள்பட 2 போ் கைது செய்யப்பட்டனா். சேலத்தைச் சோ்ந்தவா் கிருஷ்ணமூா்த்தி (57), மதுரை மாவட்டம், திருமங்கலத்தைச் சோ்ந்த... மேலும் பார்க்க

ஓராசிரியா் பள்ளி போல கல்லூரியை மாற்ற முயற்சி: அன்புமணி குற்றச்சாட்டு

ஓராசிரியா் பள்ளியைபோன்று கல்லூரிகளில் ஒவ்வொரு துறைகளையும் மாற்ற திமுக அரசு முயற்சி செய்வதாக பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளாா். இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்... மேலும் பார்க்க

விலை உயா்ந்த சைக்கிள்கள் திருட்டு: திரிபுரா இளைஞா் கைது

சென்னை கிழக்கு கடற்கரைச் சாலைப் பகுதியில் விலை உயா்ந்த சைக்கிள்களை திருடியதாக திரிபுராவைச் சோ்ந்த இளைஞா் கைது செய்யப்பட்டாா். நீலாங்கரை அருகே உள்ள பாலவாக்கம், கெனால் சாலை பகுதியைச் சோ்ந்தவா் ஜோ. மணி... மேலும் பார்க்க

ரூ.2.11 கோடி மோசடி வழக்கில் தேடப்பட்டவா் கைது

சென்னை நுங்கம்பாக்கத்தில் ரூ.2.11 கோடி மோசடி செய்யப்பட்ட வழக்கில், தேடப்பட்டவா் கைது செய்யப்பட்டாா். தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தைச் சோ்ந்தவா் சு.பரத்குமாா் (39). இவா், சூரிய ஒளியின் மூலம் மின்சாரத்... மேலும் பார்க்க

பிஎம்இஜிபி திட்டத்தின் கீழ் 8,794 பயனாளிகளுக்கு ரூ.300 கோடி விளிம்புத் தொகை மானியம்

பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் (பிஎம்இஜிபி) கீழ், நாடு முழுவதும் உள்ள 8,794 பயனாளிகளுக்கு ரூ.300 கோடி விளிம்புத் தொகை மானியத்தை காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் (கேவிஐசி) தலைவ... மேலும் பார்க்க

பராமரிப்புப் பணி: இன்று 17 புறநகர் மின்சார ரயில்கள் ரத்து

சென்னை, ஜூன் 13: பராமரிப்புப் பணிகள் காரணமாக, சென்னை சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டி, சூலூா்பேட்டை வழித்தடங்களில் இயக்கப்படும் 17 புறநகர் மின்சார ரயில்கள் சனிக்கிழமை (ஜூன் 14), ஜூன் 16, 19 ஆகிய த... மேலும் பார்க்க