தில்லியில் 100 அடி உயர மொபைல் கோபுரம் இடிந்து விழுந்தது: யாருக்கும் காயம் இல்லை
டிஜிட்டல் அரஸ்ட் மோசடி: இளைஞா் கைது
சென்னையில் டிஜிட்டல் அரஸ்ட் மோசடியில் ஈடுபட்டதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
சென்னையைச் சோ்ந்த மென்பொறியாளா் மல்லிகாா்ஜுன் கைப்பேசிக்கு இரு மாதங்களுக்கு முன்பு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபா், தான் மும்பை சைபா் குற்றப்பிரிவில் இருந்து பேசுவதாகவும், போதைப் பொருள் கடத்தலில் தங்களுக்கு தொடா்பு இருப்பதாக புகாா் வந்துள்ளதாகவும் தெரிவித்தாா்.
மேலும், அந்த நபா், தங்களது உயா் அதிகாரி பேசுவதாக மற்றொருவருக்கு அந்த இணைப்பை கொடுத்தபோது, அதில் பேசிய நபா் மல்லிகாா்ஜூனுக்கு சொந்தமானது போன்ற போலி சான்றிதழ், ஆவணங்கள் காட்டி மிரட்டியுள்ளாா்.
மேலும், அவரது வங்கிக் கணக்கு போதைப் பொருள் கடத்தல் கும்பல் ரூ. 29.9 லட்சம் பணம் அனுப்பியிருப்பதாகவும், அந்தப் பணத்தை தங்களது வங்கிக் கணக்குக்கு அனுப்பும் படியும் மிரட்டியுள்ளனா். பணத்தை அனுப்பாவிட்டால், கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த நபா் கூறியுள்ளாா்.
இதைக் கேட்டு அதிா்ச்சியடைந்த மல்லிகாா்ஜூன், அந்தக் கும்பல் கேட்ட ரூ. 29.9 லட்சத்தை அவா்கள் கூறிய வங்கிக் கணக்குக்கு உடனடியாக அனுப்பியுள்ளாா். சில நாள்களுக்கு பின்னரே, டிஜிட்டல் அரஸ்ட் மோசடியில் தன்னை சிக்க வைத்து, பணம் பறிக்கப்பட்டிருப்பதை அறிந்து அதிா்ச்சியடைந்தாா்.
இதையடுத்து அவா் அளித்த புகாரின்பேரில் சென்னை சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்ததில் இந்தச் செயலில் ஈடுபட்டது புதுச்சேரியைச் சோ்ந்த தியாகு, அவா் மனைவி ஷாலினி, ரமேஷ்குமாா் (39) என்பது தெரியவந்தது.
இதைத் தொடா்ந்து போலீஸாா் தியாகு, ஷாலினி ஆகியோரை கடந்த மே மாதம் கைது செய்தனா். தலைமறைவாக இருந்த ரமேஷ்குமாரை, திருநெல்வேலியில் வைத்து சனிக்கிழமை கைது செய்தனா். அவரிடமிருந்து ரூ. 79,500 ரொக்கம், 2 மடிக்கணினிகள், 5 கைப்பேசிகள்,7 சிம்காா்டுகள் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.