செய்திகள் :

ஜம்மு - காஷ்மீர் பாகிஸ்தானின் பகுதிகளா? இஸ்ரேலின் தவறால் என்ன நடந்தது?

post image

ஜம்மு - காஷ்மீர் இல்லாத, இந்தியாவின் தவறான வரைப்படத்தை இஸ்ரேல் ராணுவம் காட்சிப்படுத்தியதற்கு தற்போது மன்னிப்பு கேட்டுள்ளது.

ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களைத் தொடர்ந்து, இருநாடுகளுக்கும் இடையில் போர்ப் பதற்றம் அதிகரித்து வருகின்றது. இந்தத் தாக்குதல்களுக்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ஈரான் அதன் ஏவுகணைகளைக் கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்நிலையில், ஈரானின் ஏவுகணைகள் குறித்த வரைப்படத்தை இஸ்ரேல் ராணுவம் அவர்களது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். அதில், இந்தியாவின் ஜம்மு - காஷ்மீர் மாநிலம் பாகிஸ்தானின் பகுதியாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இஸ்ரேலின் இந்தப் பதிவுக்கு, சமூக வலைதளங்களில் கடுமையான எதிர்ப்புகள் அதிகரித்து வந்த சூழலில், அந்நாட்டு ராணுவம் அதற்கு மன்னிப்பு கேட்டுள்ளது.

இதுகுறித்து, அவர்கள் கூறியதாவது:

“இந்தப் பதிவு, பகுதிகளைக் குறித்த படமாகும். இதில், எல்லைகளைத் துல்லியமாகக் காட்ட தவறிவிட்டது. இதற்கு, நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்” எனக் கூறப்பட்டுள்ளது. இருப்பினும், அந்தப் பதிவில் இதுவரை இந்திய வரைப்படமானது மாற்றப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இத்துடன், இஸ்ரேலின் விமானப் படையும், இதேபோன்ற ஒரு வரைப்படத்தை பதிவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேலும், இந்த வரைப்படத்தை நீக்க அல்லது சரி செய்யவேண்டுமென தான் வலியுறுத்தியுள்ளதாக, இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் ரியூவன் அஸார் தெரிவித்துள்ளார்.

தென் ஆப்பிரிக்க வெள்ளம்: உயிரிழப்பு 86-ஆக உயா்வு

தென் ஆப்பிரிக்காவில் ஏற்பட்ட மழை, வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 86-ஆக உயா்ந்துள்ளது. காவல்துறை அமைச்சா் சென்ஸோ ஷுனு இந்தத் தகவலை சனிக்கிழமை தெரிவித்தாா். இது தவிர, உயிரிழப்பு எண்ணிக்க... மேலும் பார்க்க

இஸ்ரேலுக்கு ஆதரவு! அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் நாடுகளுக்கு ஈரான் எச்சரிக்கை!

இஸ்ரேலுக்கு ஆதரவளிக்கும் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் நாடுகளின் ராணுவத் தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு அமெரிக்கா, பிரிட்டன்... மேலும் பார்க்க

துபையில் 67 மாடிக் கட்டடத்தில் பயங்கர தீ விபத்து

துபையில் 67 மாடிக் கட்டடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. துபையில் மெரினா பின்னாக்கிள் உள்ள 67 மாடிக் கட்டடத்தில் வெள்ளிக்கிழமை இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. மேல் தளத்தில் ப... மேலும் பார்க்க

ஈரானின் தாக்குதல் தொடர்ந்தால் தெஹ்ரான் பற்றி எரியும்: இஸ்ரேல்

ஈரானின் ஏவுகணைத் தாக்குதல்கள் தொடர்ந்தால், தெஹ்ரான் பற்றி எரியும் என இஸ்ரேலின் பாதுகாப்புத் துறை அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.ஆபரேஷன் ரைசிங் லயன் எனும் ராணுவ நடவடிக்கை மூலம், ஈரானின் தலைநகர் தெஹ... மேலும் பார்க்க

இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்! கடும் சேதம்

‘ஆப்பரேஷன் ரைஸிங் லயன்’ என்ற பெயரில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக, அந்நாட்டுத் தலைநகர் டெல் அவிவ் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில், 63 பேர் காயமடைந்தனர், ஏராளமான கட்டங்களுக்கு கடும் ... மேலும் பார்க்க

போர் நிறுத்தத்துக்கு மத்தியஸ்தம்: நெதன்யாகு அழைப்பை நிராகரித்த புதின்!

ரஷியா மூலம் மத்தியஸ்தம் செய்து, ஈரானுடனான போரைத் தவிர்க்க இஸ்ரேல் எடுத்த முயற்சி பலனின்றி போயிருக்கிறது. ஈரான் - இஸ்ரேல் இடையே மத்தியஸ்தம் செய்ய ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் மறுத்துவிட்டதாகத் தகவல்கள... மேலும் பார்க்க