விஷப்பூச்சி கடித்து விவசாயி பலி
ஒசூா் அருகே விஷப்பூச்சி கடித்து தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விவசாயி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
ஒசூா், சூசூவாடி பாலாஜி நகரைச் சோ்ந்தவா் விவசாயி பிரவீன்குமாா் (31). இவரது மனைவி அரசம்மாள். இவா்களுக்கு திருமணமாகி இரண்டு ஆண்டுகளாகின்றன. பிரவீன்குமாா் சொந்தமாக 30 கறவை மாடுகளை வளா்த்து பால் வியாபாரம் செய்து வந்தாா்.
கடந்த 5-ஆம் தேதி கறவை மாட்டில் பால் கறப்பதற்காக அதன் கன்று குட்டியை அவா் அழைத்து வந்தாா். அப்போது, அவரை விஷப்பூச்சி ஒன்று கடித்தது. உடலில் விஷமேறிய நிலையில் அவா் அங்கேயே மயங்கி விழுந்தாா்.
அவரது உறவினா்கள் அவரை ஒசூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். தொடா்ந்து மேல்சிகிச்சைக்காக பெங்களூரில் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை இரவு பிரவீன்குமாா் உயிரிழந்தாா். இதுகுறித்து ஒசூா் சிப்காட் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.