செய்திகள் :

Los Angeles Riots: பத்திரிகையாளர் தலையில் ரப்பர்க் குண்டால் சுட்ட அமெரிக்க போலீஸ்; வலுக்கும் கண்டனம்

post image

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸில் குடியேற்றமானவர்களுக்கு ஆதரவாக நடந்துவரும் போராட்டத்தில் பத்திரிகையாளர் ஒருவர் காவல்துறையினரால் ரப்பர்க் குண்டு மூலம் நெற்றியில் சுடப்பட்டுள்ளார்.

நடைபெற்ற தாக்குதல் குறித்துப் பேசிய நியூயார்க் போஸ்ட் பத்திரிகையின் புகைப்படப் பத்திரிகையாளர் டோபி கான்ஹாம், "நான் அங்கே நின்று எனது வேலையைச் செய்துகொண்டிருந்தேன்.

திடீரென அந்த அதிகாரி என்னை நோக்கி துப்பாக்கியைத் திருப்புவதையோ, நானிருக்கும் திசையில் குறிவைப்பதையோ கவனிக்கவில்லை.

அந்தப் பொருள் (ரப்பர்க் குண்டு) மிகவும் விரைவாக என்னை நோக்கி வந்தது. அதன்பிறகு நடந்த எதுவும் எனக்குத் தெரியாது. நான் தலையில் குண்டு அடிபட்டு தரையில் விழுந்து கிடந்தேன்" என சி.என்.என் தளத்துக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

குண்டுபட்டதால் அவரது தலையில் அழுத்தமான சிகப்பு தழும்பு பதிந்துள்ளது. மற்றபடி பெரிய அளவிலான காயம் எதுவுமில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சமூக வலைத்தளங்களில் பாதுகாப்புப் படையினரின் இச்செயலுக்குக் கண்டனம் வலுத்துள்ளது.

முன்னதாக இதே போராட்டத்தைக் குறித்து செய்தி சேகரித்துவந்த ஆஸ்திரேலியப் பத்திரிகையாளர் காலில் ரப்பர் குண்டு சுடப்பட்டது.

'9 நியூஸ்' செய்தி நிறுவனத்தைச் சேர்ந்த லாரன் டோமாசி, ஜூன் 8ம் தேதி களத்திலிருந்தபோது காலில் குண்டடிபட்டு கீழே விழுந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

'ஒரே பாடலில் முதலமைச்சர் ஆக முடியாது விஜய்!' - எச்சரிக்கும் மருது அழகுராஜ் | பேட்டி

நமது எம்.ஜி.ஆர், நமது அம்மா நாளிதழின் முன்னாள் ஆசிரியர் மருது அழகுராஜ். விஜய்க்கும் தவெகவுக்கும் ஆதரவாக கருத்துகளை தெரிவித்துக் கொண்டிருந்தார். விஜய்யின் கட்சியில் விரைவில் இணையப்போகிறார் என்றெல்லாம் ... மேலும் பார்க்க

Vijay: "இளைய காமராஜர்னு சொல்லாதீங்க; தேர்தல் பற்றி பேச வேண்டாம்" - மாணவர்கள் மத்தியில் விஜய் பேச்சு

தவெக சார்பில் கல்வி விருது வழங்கும் விழாவை, அதன் தலைவர் விஜய் நடத்தி வருகிறார். 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் நல்ல மதிப்பெண் எடுத்த மாணவர்களைத் தொகுதிவாரியாக அழைத்துப் பாராட்டி வருகிறார்.Vijayஇரண்டுக... மேலும் பார்க்க

Ahmedabad Plane Crash : 'அடுத்த நொடி நிச்சயமில்லாத வாழ்க்கை...' - விஜய் வருத்தம்!

'தவெக கல்வி விழா!'தவெக தலைவர் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் நல்ல மதிப்பெண் எடுத்த மாணவர்களை பாராட்டும் வகையில் கல்வி விருது வழங்கும் விழாவை நடத்தி வருகிறார். மாமல்லபுரத்தில் நடந்த இந்த நிகழ்வில் அகமத... மேலும் பார்க்க

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்; 'இன்னும் ஒரு போரா?' - கைவிரித்த அமெரிக்கா; என்ன நடக்கிறது?

இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் மீண்டும் சண்டை தொடங்கியுள்ளது.நேற்று இரவு, ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தத் தொடங்கியிருக்கிறது. ஈரான் அணு ஆயுதத்தைத் தயாரித்துவிடுமோ என்கிற இஸ்ரேலின் அச்சம்தான் இந்தத் த... மேலும் பார்க்க

Ahmedabad Plane Crash : பறவை மோதியதா இல்லை மனித தவறா? | Detailed Technical Explanation

அகமதாபாத்தில் நடந்த விமான விபத்தில் 200 க்கும் மேற்பட்ட பயணிகள் உயிரிழந்திருக்கின்றனர். இந்த விபத்து எப்படி நடந்தது? அவசரகாலங்களில் பயணிகளைக் காப்பாற்ற விமானிகள் என்ன மாதிரியான நடவடிக்கைகளில் ஈடுபடுவா... மேலும் பார்க்க