செய்திகள் :

`கூட்டணி குறித்து நானே முடிவு செய்வேன்' - ராமதாஸ் செய்தியாளர் சந்திப்பின் முக்கிய 10 பாயிண்ட்ஸ்!

post image

கடந்த சில மாதங்களாகவே, பாமகவில் உள்கட்சி பூசல் அவ்வப்போது வெடித்துகொண்டு வருகிறது. இளைஞரணி தலைவர் பதவியில் தொடங்கிய மோதல் இப்போது தலைவர் பதவிக்கு வந்து நிற்கிறது.

கடந்த டிசம்பர் மாதம், பா.ம.கவின் சிறப்பு புத்தாண்டு பொதுக்குழு கூட்டத்தில், தன்னுடைய மகள் வழி பேரனான முகுந்தனை பாமகவின் இளைஞரணி தலைவராக அறிவித்தார் பாமக நிறுவனர் ராமதாஸ். இதற்கு மேடையிலேயே கடும் எதிர்ப்புகளை தெரிவித்திருந்தார் பாமக தலைவர் அன்புமணி.

இந்த முட்டல், மோதல் தொடர, கடந்த ஏப்ரல் மாதம், 'இனி நானே பாமகவின் தலைவர்' என்று பரபரப்பை கிளப்பினார் ராமதாஸ். இதற்கு இடையில் ஏகப்பட்ட சமாதான பேச்சுவார்த்தைகள் நடக்க, எதுவும் கைக்கொடுக்கவில்லை.

ராமதாஸ், அன்புமணி
ராமதாஸ், அன்புமணி

கடந்த வாரம் கூட, தைலாபுரத்திற்கு சென்று அன்புமணி தனது தந்தையுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அன்புமணிக்கு அடுத்து, அதே நாளில் ஆடிட்டர் குருமூர்த்தி, சைதை துரைசாமியும் தைலாபுரத்திற்கு சென்று, ராமதாஸுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ் பேசியவற்றில் முக்கிய 10 பாயிண்டுகள்...

1. ஆடிட்டர் குருமூர்த்தி - சைதை துரைசாமி நடத்திய சமாதான பேச்சுவார்த்தையின் ரிசல்ட் 'டிரா'.

2. 'மாநாட்டு மேடையிலேயே அன்புமணிக்கு தலைவர் பதவியை தருகிறேன்' என்று கௌரவ தலைவர் மற்றும் சமூக முன்னேற்ற சங்கத்தின் தலைவரை அன்புமணியிடன் பேச அனுப்ப முயன்றேன். ஆனால், அவர் நேரில் சந்திக்க மறுத்துவிட்டார். அதனால் தான், எனக்கு கோபம் வந்தது.

3. 'கொள்ளுபேரன்களோடு விளையாட்டு..' என்று என்னால் இருக்க முடியாது. 46 ஆண்டுகளாக மக்களோடு பழகி வருகிறேன். அதை நான் தொடர வேண்டும்.

4. இன்னும் ஓரிரு ஆண்டுகளுக்கு தலைவராக இருந்துகொள்கிறேன். அதற்கு எனக்கு உரிமை இல்லையா?

5. தேர்தலுக்கு பிறகு, அன்புமணி தலைவர் பதவி உள்பட அனைத்தையும் எடுத்துகொள்ளட்டும். 40 - 50 தொகுதிகளில் நாம் வலுவாக இருந்தால் தான் கூட்டணி பேச முடியும். வெற்றி பெற முடியும்.

6.பிரதமர் மோடியின் பதவி ஏற்பு விழாவில் கலந்துகொள்ள நான், ஜி.கே. மணி மற்றும் அன்புமணி சென்றபோதே, அவருக்கு கட்சியை எடுத்துகொள்ள வேண்டும் என்று எண்ணம்.

அன்புமணி - ராமதாஸ்
அன்புமணி - ராமதாஸ்

7. சௌமியா பேசியதற்கு இணங்க, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, அன்புமணிக்கு முடிசூட்டு விழா நடத்தப்பட்டது. ஆனால், என் குடும்பத்து பெண்கள் அரசியல் மற்றும் கட்சி சம்பந்தமான விஷயங்களில் ஈடுபடுவதை நான் விரும்பவில்லை.

8. அன்புமணி என் பேச்சை கேட்காமல் இருப்பதற்கு பாஜக பின்புலம் கிடையாது.

9. எந்தக் கட்சி உடன் கூட்டணி என்பதை நானே முடிவு செய்வேன். இப்போதைக்கு தவெக உடன் இதுவரை கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லை. இதுகுறித்து கட்சியின் தலைவர்கள் இணைந்து முடிவு செய்வோம்.

10. கண்டிப்பாக, அன்புமணியை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கமாட்டேன்".

மகா கும்பமேளா: ``இறந்த ஏழைகளின் எண்ணிக்கையை பாஜக அரசு மறைக்கிறது'' - ராகுல் காந்தி குற்றச்சாட்டு

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கடந்த ஜனவரி மாதம் மகா கும்பமேளா நடைபெற்றது. ஜனவரி 29-ம் தேதி மெளனி அமாவாசை தினத்தில் புனித நீராட கோடிக்கணக்கான மக்கள் அங்கு குவிந்தனா். அப்போது ஏற்பட்ட நெரிசலில் சி... மேலும் பார்க்க

``தமிழ்நாட்டில் பாஜக கூட்டணி ஆட்சி அமையும்; அது இபிஎஸ் தலைமையில் அமையும்'' - நயினார் நாகேந்திரன்

நெல்லை மாவட்ட பாஜக அலுவலகத்தில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "பிரதமர் மோடி இந்தியாவின் பெருமையை உலக அளவில் உயர்த்தி, நாட்டிற்குப் பாதுகாப்பிற... மேலும் பார்க்க

``ஈபிஎஸ் சுயமாக சிந்திக்கக்கூடியவர், பாஜக உடன் இறுதிவரை இருப்பாரா?'' - சபாநாயகர் அப்பாவு

நெல்லையில் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர், தி.மு.கவின் கூட்டணிக் கட்சிகளோடு பா.ஜ.க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு நே... மேலும் பார்க்க

``அன்புமணி கண்ணைக் குத்திவிட்டார், அவமானப்படுத்திவிட்டார்; இதுதான் தலைவிதி..'' - வெடித்த ராமதாஸ்

பாமக கட்சிக்குள் ராமதாஸ் - அன்புமணி ராமதாஸ் இருவருக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வரும் இந்த சூழலில் ராமதாஸ் தற்போது செய்தியாளர்களை சந்தித்துள்ளார்.அவர் பேசிவருவதாவது...'தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வ... மேலும் பார்க்க

``4 ஆண்டுகளில் 458 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானிய உற்பத்தி..'' - வேளாண் கருத்தரங்கில் முதல்வர்

வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம்தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறையில் சார்பில் விவசாயத்தில் நவீன தொழில்நுட்பங்கள், புதிய ரகங்கள், வேளாண் இயந்திரங்கள், மதிப்புக்கூட்டும் தொழில்நுட்பங்கள் குறித்த... மேலும் பார்க்க

Doctor Vikatan: பணியிடத்தில் அடிக்கடி கொட்டாவி, நன்றாகத் தூங்கினாலும் தொடர்வது ஏன்?

Doctor Vikatan: அலுவலகத்தில்இருக்கும்போது அடிக்கடி கொட்டாவி வருகிறது. அடிக்கடி தண்ணீர் குடிப்பது, இரவு 8 மணி நேரம் தூங்குவது உள்ளிட்ட விஷயங்கள் சரியாக இருந்தாலும், கொட்டாவி வந்து கொண்டே இருக்கிறது... ... மேலும் பார்க்க