செய்திகள் :

``ஈபிஎஸ் சுயமாக சிந்திக்கக்கூடியவர், பாஜக உடன் இறுதிவரை இருப்பாரா?'' - சபாநாயகர் அப்பாவு

post image

நெல்லையில் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர், தி.மு.கவின் கூட்டணிக் கட்சிகளோடு பா.ஜ.க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு நேரடியாக பதிலளிக்க மறுத்த அப்பாவு, "இறுதிவரை இ.பி.எஸ் அவர்களோடு இருப்பாரா என்று பார்ப்போம்" எனக் கூறினார். மேலும், "அவர் நல்ல முடிவெடுத்துவிட்டார்.

அப்பாவு

மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் சுயமாக சிந்திக்கக்கூடியவர், விரைவில் நல்ல முடிவை எடுப்பார். பொறுத்திருந்து பாருங்கள்" என்றும் கூறினார்.

அப்பாவுவின் இந்த கருத்துகள், அ.தி.மு.கவில் நிலவும் உட்கட்சிப் பூசலையும், எதிர்காலத்தில் எடப்பாடி பழனிசாமியின் அரசியல் நிலைப்பாடு குறித்தும் பல்வேறு யூகங்களை எழுப்பியுள்ளன.

அ.தி.மு.கவில் ஒற்றைத் தலைமைக்கு பிறகு, எடப்பாடி பழனிசாமி பாஜகவுடன் நெருங்கிய உறவு கொண்டிருப்பதாக கருதப்படும் நிலையில், அப்பாவுவின் இந்தப் பேச்சு முக்கியத்துவம் பெறுகிறது. "சுயமாக சிந்திக்கக்கூடியவர் விரைவில் நல்ல முடிவை எடுப்பார்" என்ற அவரது கூற்று, எடப்பாடி பழனிசாமி பா.ஜ.க கூட்டணியில் இருந்து விலகி வேறு ஏதேனும் முடிவை எடுக்க வாய்ப்புள்ளதா என்ற கேள்வியையும் எழுப்புகிறது.

அப்பாவு

தமிழக அரசியல் சூழலில், மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு பா.ஜ.கவின் அடுத்தகட்ட நகர்வுகள் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகின்றன. இத்தகைய சூழலில், சட்டப்பேரவை தலைவர் அப்பாவுவின் இந்த கருத்துக்கள், தமிழக அரசியல் களத்தில் மேலும் பல விவாதங்களை கிளப்பியுள்ளது.

`கூட்டணி குறித்து நானே முடிவு செய்வேன்' - ராமதாஸ் செய்தியாளர் சந்திப்பின் முக்கிய 10 பாயிண்ட்ஸ்!

கடந்த சில மாதங்களாகவே, பாமகவில் உள்கட்சி பூசல் அவ்வப்போது வெடித்துகொண்டு வருகிறது. இளைஞரணி தலைவர் பதவியில் தொடங்கிய மோதல் இப்போது தலைவர் பதவிக்கு வந்து நிற்கிறது. கடந்த டிசம்பர் மாதம், பா.ம.கவின் சிறப... மேலும் பார்க்க

மகா கும்பமேளா: ``இறந்த ஏழைகளின் எண்ணிக்கையை பாஜக அரசு மறைக்கிறது'' - ராகுல் காந்தி குற்றச்சாட்டு

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கடந்த ஜனவரி மாதம் மகா கும்பமேளா நடைபெற்றது. ஜனவரி 29-ம் தேதி மெளனி அமாவாசை தினத்தில் புனித நீராட கோடிக்கணக்கான மக்கள் அங்கு குவிந்தனா். அப்போது ஏற்பட்ட நெரிசலில் சி... மேலும் பார்க்க

``தமிழ்நாட்டில் பாஜக கூட்டணி ஆட்சி அமையும்; அது இபிஎஸ் தலைமையில் அமையும்'' - நயினார் நாகேந்திரன்

நெல்லை மாவட்ட பாஜக அலுவலகத்தில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "பிரதமர் மோடி இந்தியாவின் பெருமையை உலக அளவில் உயர்த்தி, நாட்டிற்குப் பாதுகாப்பிற... மேலும் பார்க்க

``அன்புமணி கண்ணைக் குத்திவிட்டார், அவமானப்படுத்திவிட்டார்; இதுதான் தலைவிதி..'' - வெடித்த ராமதாஸ்

பாமக கட்சிக்குள் ராமதாஸ் - அன்புமணி ராமதாஸ் இருவருக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வரும் இந்த சூழலில் ராமதாஸ் தற்போது செய்தியாளர்களை சந்தித்துள்ளார்.அவர் பேசிவருவதாவது...'தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வ... மேலும் பார்க்க

``4 ஆண்டுகளில் 458 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானிய உற்பத்தி..'' - வேளாண் கருத்தரங்கில் முதல்வர்

வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம்தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறையில் சார்பில் விவசாயத்தில் நவீன தொழில்நுட்பங்கள், புதிய ரகங்கள், வேளாண் இயந்திரங்கள், மதிப்புக்கூட்டும் தொழில்நுட்பங்கள் குறித்த... மேலும் பார்க்க

Doctor Vikatan: பணியிடத்தில் அடிக்கடி கொட்டாவி, நன்றாகத் தூங்கினாலும் தொடர்வது ஏன்?

Doctor Vikatan: அலுவலகத்தில்இருக்கும்போது அடிக்கடி கொட்டாவி வருகிறது. அடிக்கடி தண்ணீர் குடிப்பது, இரவு 8 மணி நேரம் தூங்குவது உள்ளிட்ட விஷயங்கள் சரியாக இருந்தாலும், கொட்டாவி வந்து கொண்டே இருக்கிறது... ... மேலும் பார்க்க