விமான விபத்து: மருத்துவமனையில் துர்நாற்றம்! உடல்களை ஒப்படைப்பதில் சிக்கல்!!
``அன்புமணி கண்ணைக் குத்திவிட்டார், அவமானப்படுத்திவிட்டார்; இதுதான் தலைவிதி..'' - வெடித்த ராமதாஸ்
பாமக கட்சிக்குள் ராமதாஸ் - அன்புமணி ராமதாஸ் இருவருக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வரும் இந்த சூழலில் ராமதாஸ் தற்போது செய்தியாளர்களை சந்தித்துள்ளார்.
அவர் பேசிவருவதாவது...
'தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா இப்பயிரை
கண்ணீரால் காத்தோம் கருகத் திருவுளமோ?
எண்ணமெல்லாம் நெய்யாக எம்முயிரினுள் வளர்ந்த
வண்ண விளக்கிது மடியத் திருவுளமோ?
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்' என்று பாரதியார் சுதந்திரப் போராட்டம் குறித்து உருக்கமாக இப்படி பாடியிருக்கிறார். ஆக, எனக்கும், செயல் தலைவருக்கும் போய் கொண்டிருக்கும் பிரச்னை முழுவதும் உங்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை.
தலைவிதி...
'காத்து போகாத இடத்திற்கு காவல் துறை போகும்' என்று காவல்துறையினர் கூறுவார்கள். அதே மாதிரி, ஊடகத்தினர் சளைச்சவர்கள் அல்ல.
எங்கள் இருவருடைய சமரசப் பேச்சுவார்த்தை போய் கொண்டிருக்கிறது. அவர்கள் இங்கே வந்தார்கள்... நான் அங்கே போனேன்... பேச்சுவார்த்தை சென்றது. ஆனால், கடைசியில் பேச்சுவார்த்தை 'டிரா'வில் முடிந்துவிட்டது.
14 பஞ்சாயத்துக்காரர்கள் வந்தார்கள். அவர்கள் நான் தொடங்கிய 34 அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் அவர்கள். இது தான் தலைவிதி என்று ஏற்றுக்கொண்டேன்.
(தகவல்கள் சேர்க்கப்படும்...)