குஜராத் விமான விபத்து! பிரிட்டன், போர்ச்சுகல், கனடா அமைச்சர்களுடன் மத்திய அமைச்ச...
``தமிழ்நாட்டில் பாஜக கூட்டணி ஆட்சி அமையும்; அது இபிஎஸ் தலைமையில் அமையும்'' - நயினார் நாகேந்திரன்
நெல்லை மாவட்ட பாஜக அலுவலகத்தில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "பிரதமர் மோடி இந்தியாவின் பெருமையை உலக அளவில் உயர்த்தி, நாட்டிற்குப் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார். பத்தாயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் விவசாயத்திற்குச் செலவு செய்துள்ளார்கள்.

நாட்டின் பாதுகாப்பு, நாட்டின் வளர்ச்சி, ஆதாரமாக இருக்கும் விவசாயம், ரயில், விமான போக்குவரத்து என உலக அளவில் பேசப்படுகிற அளவிற்கு மிகப்பெரிய மாற்றத்தை மோடி தந்திருக்கிறார்கள்.
மேலும், உலக அளவில் இந்தியப் பொருளாதாரத்தை நான்காவது நாடாக உயர்த்திய பெருமை மோடி அவர்களையே சாரும். கடந்த 11 ஆண்டுகால பா.ஜ.க ஆட்சியில் தமிழகத்திற்கு மட்டும் ரூ.10 லட்சம் கோடி நிதி தனியாகக் கொடுத்துள்ளார்கள்.
எங்களது தேசிய ஜனநாயகக் கூட்டணியில் எங்கும் மதவாதம் இல்லை. ஒரு மதத்தை நம்பி யாரும் ஆட்சிக்கு வர முடியாது. இந்தியாவில் பிறந்த அனைவரும் இந்துக்கள். இந்து என்பது ஒரு பண்பாடு, ஒரு வழிமுறை. இந்து என்ற மதம் இல்லை. வரும் சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க கூட்டணி ஆட்சிதான் அமையும். அந்தக் கூட்டணி இ.பி.எஸ் தலைமையில் அமையும்.

தி.மு.க கூட்டணியில் உள்ள கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். அதைப்பற்றி இப்போது பேச முடியாது. தேர்தலுக்கு இன்னும் பத்து மாதங்கள் உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணிக்கு நிறைய பேர் வருவார்கள். மதுரையில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டில் 4 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.” என்றார்.