செய்திகள் :

Aamir Khan: "என் கனவுப் படமான மகாபாரதம்தான் என் கடைசிப் படமா?" - நடிகர் ஆமீர் கான் பதில்

post image

பாலிவுட் நடிகர் ஆமீர் கானின் புதிய படமான 'சிதாரே ஜமீன் பர்' வரும் ஜூன் 20-ம் தேதி திரைக்கு வர இருக்கிறது.  இதையொட்டி இப்படத்தை விளம்பரப்படுத்தும் வேலையில் பிஸியாக இருக்கிறார்.

ஆமீர் கான் நேர்காணல் ஒன்றில், "மகாபாரதம் எனது கனவுப் படம். அப்படத்திற்குப் பிறகு என்னால் வேறு எதையும் செய்ய முடியாது. ஆனால் நீங்கள் கேட்பதால், இதுதான் எனக்கு யோசிக்கக்கூடிய ஒரே விஷயமாக இருக்கிறது.

இதற்குப் பிறகு, நான் வேறு எதுவும் செய்யத் தேவையில்லை என்று நினைப்பேன்" என்று கூறியிருந்தார்.

இதையடுத்து இதுதான் ஆமீர் கானின் கடைசிப் படம் என்றும் அதன் பிறகு அவர் நடிக்க மாட்டார் என்றும் பாலிவுட் வட்டாரத்தில் செய்திகள் பரவின.

ஆமீர் கான்
ஆமீர் கான்

தற்போது பாட்காஸ்ட் ஒன்றில் இதற்கு விளக்கமளித்திருக்கும் நடிகர் ஆமீர் கான், "மகாபாரதம் பல அடுக்குகள், உணர்ச்சிகளைக் கொண்டது. நீங்கள் உலகத்தில் பார்க்கும் அனைத்தையும் மகாபாரதத்தில் பார்ப்பீர்கள். மகாபாரதம் கதை பல ஆண்டுகளாக என்னிடம் இருக்கிறது.

அதனை திரைப்படமாக எடுக்கவேண்டும் என்பது எப்போதும் எனது கனவாக இருந்தது என்பது உண்மைதான். என் வாழ்நாளில் அப்படத்தை எடுத்துவிட்டால் என் மனம் நிறைவடைந்ததாக உணர்வேன்.

ஆமீர் கான்
ஆமீர் கான்

ஆனால், அதுதான் என் கடைசிப் படம் என்று நான் எங்கும் சொல்லவில்லை. ஒருவேளை நான் அதை என் கனவுப் படம் என்று கூறியது தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கலாம். நான் சினிமாவில் வெகுதூரம் பயணிக்க வேண்டும் என்று நினைக்கிறேன்" என்று பேசியிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

அகமதாபாத் விமான விபத்து: ``விமானி என் நண்பர்தான்"- 12th Fail பட நடிகர் விக்ராந்த் மெஸ்ஸி உருக்கம்

இந்தியாவின் மிகவும் துன்பமான தினங்களில் ஒன்று நேற்று. குஜராத் மாநிலம் அகமாதாபாத்தில் எதிர்பாராத விதமாக ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதில் 241 பேர் பலியாகியிருக்கின்றனர். அதில் ஒருவர் 12th ஃபைல் ... மேலும் பார்க்க

Anurag Kashyup: `மாமியார் மருமகள் கதைகளை...' - நெட்ஃபிளிக்ஸ் CEO, ஏக்தா கபூருடன் மோதல் ஏன்?

தயாரிப்பாளரும் தொலைக்காட்சி அதிபருமான ஏக்தா கபூர், அனுராக் காஷ்யப் கூறிய "மாமியார் மருமகள் கதைகள்" விமர்சனத்துக்காக கடுமையாக எதிர்வினையாற்றியுள்ளார். தற்போது பாலிவுட்டில் பெரும் விவாதமாகியிருக்கும் இந... மேலும் பார்க்க

Aamir Khan: ``நானும் மணிரத்னமும் இணைய வேண்டிய படம்..'' - அமீர் கான் சொன்ன கதை என்ன?

இந்திய சினிமாவின் உச்சத்தில் இருக்கும் கலைஞர்களான அமீர் கான் மற்றும் மணிரத்னம் இடையே நல்ல நட்புறவு இருந்தாலும், இருவரும் இதுவரைத் திரைப்படத்தில் இணைந்து பணியாற்றியது இல்லை. ஷாரூக் கான், அபிஷேக் பச்சன்... மேலும் பார்க்க

Deepika: ``நான் தான் பிரேக் அப் செய்தேன்; இப்போது அவர் ஸ்டார்'' - முன்னாள் காதலன் பேசியதென்ன?

தீபிகா படுகோனே 2000-களில் மும்பைக்கு வந்துள்ளார். மாடலிங் துறையில் வெற்றிகரமாக இயங்கிய அவர், பின்னர் பாலிவுட்டில் கால் பதித்துள்ளார். அந்த காலத்தில் தீபிகா மற்றும் முசமில் இப்ராஹிம் காதலித்துள்ளனர். ம... மேலும் பார்க்க

Sitaare Zameen Par: "இதனால் நஷ்டம் ஏற்படலாம்; ஆனால்..." - OTTயில் படத்தை வெளியிட மறுத்த ஆமீர் கான்

பாலிவுட் நடிகர் ஆமீர் கான் நடித்த சிதாரே ஜமீன் பர் படம் வரும் 20ம் தேதி திரைக்கு வருகிறது.இப்படத்தை ஆமீர் கான் பெரிதும் நம்பி இருக்கிறார். இதற்காகத் தொடர்ச்சியாகப் படத்தை விளம்பரப்படுத்தும் வேலையில் ஆ... மேலும் பார்க்க

Aamir Khan: `மகாபாரதம்' படத்திற்கு பிறகு நடிப்புக்கு முழுக்கா? - நடிகர் ஆமீர் கான் சொல்வது என்ன?

பாலிவுட் நடிகர் ஆமீர் கான் தற்போது தனது புதிய படமான சிதாரே ஜமீன் பர் படத்தை விளம்பரப்படுத்தும் வேலையில் பிஸியாக இருக்கிறார். இப்படம் வரும் 20-ம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில், டிவி ஷோ ஒன்றி... மேலும் பார்க்க