குஜராத் விமான விபத்து! பிரிட்டன், போர்ச்சுகல், கனடா அமைச்சர்களுடன் மத்திய அமைச்ச...
தென்காசி முதியோர் இல்லத்தில் 3 பேர் பலி! உணவு ஒவ்வாமை காரணமா?
தென்காசியில் தனியார் முதியோர் இல்லத்தில் உணவு ஒவ்வாமையால் 3 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் உள்ள சுந்தரபாண்டியபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் முதியோர் இல்லத்தில் 60-க்கும் மேற்பட்டோர் தங்கியுள்ளனர்.
இந்நிலையில் நேற்று இரவு உணவு சாப்பிட்டதும் சிலருக்கு ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டோர் தென்காசி மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 11 பேரில் 3 பேர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 2 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து காப்பக நிர்வாகி ராஜேந்திரனை அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆதரவற்றோர் இல்லத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க | பள்ளி மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ. 15,000! - ஆந்திரத்தில் புதிய திட்டம் அமல்