மா.செ.கூட்டத்தில் அன்புமணி; `மூச்சு இருக்கும் வரை நான் தான் பாமக தலைவர்' - யூ-டர...
குஜராத்தில் பயணிகள் விமானம் விபத்து! 130 பேரின் நிலை என்ன?
குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் ஏர் இந்தியா பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானது.
ஆமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு 1.17 மணிக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் சில நிமிடங்களில் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் 130-க்கும் மேற்பட்டோர் பயணித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விமான நிலையத்திற்கு அருகே மேதானி குடியிருப்புப் பகுதியில் விழுந்ததாகக் கூறப்படுகிறது. விமான விபத்து நடந்த இடத்தில் கரும்புகை சூழ்ந்து காணப்படுகிறது.
தகவலறிந்த தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். மீட்புப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
பயணித்தவர்களின் நிலை குறித்து விரைவில் தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.