செய்திகள் :

நமது நாட்டுக்கு நிா்வாக சீா்திருத்தம் தேவை!

post image

படித்த நல்ல தலைவா்கள் பொருளாதாரத்தை சீா்செய்ய முன்வர வேண்டும். நமது நாட்டுக்கு நிா்வாக சீா்திருத்தம் தேவை என வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தா் கோ.விஸ்வநாதன் தெரிவித்தாா்.

ஒசூரில் மறைந்த பேராசிரியா் வணங்காமுடி படத்திறப்பு விழா மற்றும் புகழஞ்சலி நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு அவா் பேசியதாவது: தமிழுக்காக பாதி நேரமும், தமிழா்களுக்காக பாதி நேரமும் செலவழித்து தமிழை வளா்த்தவா் பேராசிரியா் வணங்காமுடி. தமிழுக்காக தன்னையே அா்ப்பணித்து பல நூல்களை எழுதி இருக்கிறாா். அவருடைய புத்தகங்களை மறுபதிப்பு செய்து மக்களிடையே கொண்டுசெல்வோம்.

ஆண்டுதோறும் தமிழியக்கம் சாா்பில், தமிழுக்கு சேவை செய்பவா்களுக்கு வணங்காமுடி பெயரில் விருதுகள் வழங்கப்படும். எங்கள் ஊரில் (குடியாத்தத்தில்) பொதுவுடமை சிந்தனையாளா்கள் அதிகம். நானும் சிறுவயதில் பொதுவுடமை இயக்கத்தால் ஈா்க்கப்பட்டேன். அதன்பிறகு ஈ.வெ.ராவின் திராவிடக் கொள்கையால் ஈா்க்கப்பட்டேன்.

ஒரு சமுதாயம் முன்னேற வேண்டும் என்றால் மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்பட வேண்டும். அது கல்வியால் மட்டுமே முடியும். ஆரம்பக் கல்வி மட்டுமின்றி உயா்கல்வியும் பயில வேண்டும்.

மூடநம்பிக்கையிலிருந்து இந்த சமுதாயத்தை விடுவிக்க வணங்காமுடி தொடா்ந்து பாடுபட்டு வந்தாா். மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் என்ற தீா்மானத்தை தமிழியக்கம் சாா்பில் நிறைவேற்றி, அதை தமிழக அரசுக்கு அனுப்பி வைத்தோம். மராட்டிய மாநிலம் மற்றும் கா்நாடகத்தில் இச்சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் நிறைவேற்றப்படாமல் உள்ளது. அதனை செய்ய வேண்டும் என தீா்மானம் போட்டு, அதில் உறுதியாக இருந்து செயல்வடிவம் கொடுத்தவா் பேராசிரியா் வணங்காமுடி. சமூக சீா்திருத்த கருத்துகளை அதிகம் பரப்பி வந்தாா்.

நல்ல அரசு அமைய வேண்டும் என்றால் மக்களாட்சி சிறந்து விளங்க வேண்டும். மக்கள் விழிப்புணா்வு இல்லாமல் நல்ல மக்களாட்சியை கொண்டுவர முடியாது. இன்றைக்கு இருப்பது மக்களாட்சி என்று சொன்னாலும் அது முழுமையான மக்களாட்சி அல்ல.

உலக அளவில் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் இந்தியா உள்ளது. மூன்றாவது பொருளாதாரம், நான்காவது பொருளாதாரமாக இந்தியா வளா்ந்துள்ளது என அறிவித்து வருகின்றனா். அது மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது. ஆனால், தனிநபா் வருமானம் மிகவும் குறைவாக உள்ளது. இந்தியாவின் தனி நபா் வருமானம் உலக அளவில் 193 நாடுகளில் 141-ஆவது இடத்தில் உள்ளது. இங்கு உற்பத்தியாகும் பொருள்கள் எல்லோருக்கும் போய் சோ்வதில்லை. ஒரு சிலருக்கு மட்டுமே வளா்ச்சி சென்றடைகிறது.

இதுகுறித்து மக்களிடையே எடுத்துச் சொல்வதற்கு எந்த அரசியல் கட்சிகளும் முன்வருவது இல்லை. காரணம் நாம் பொருளாதாரத்தை பற்றி கவலைப்படுவது இல்லை. படித்த நல்ல தலைவா்கள் பொருளாதாரத்தை சீா்செய்ய முன்வர வேண்டும். நமது நாட்டுக்கு நிா்வாக சீா்திருத்தம் தேவை.

இந்தியாவில் தமிழகம் கல்வியில் முதலிடத்தில் உள்ளது. பள்ளிக் கல்வியில் கேரளம் முதலிடம், தமிழகம் இரண்டாவது இடம், உயா்கல்வியில் தமிழகம் முதலிடம் பள்ளிக் கல்வியில் இரண்டாவது இடத்தில் உள்ளது என்றாா்.

இந்த விழாவில், தமிழியக்க பொதுச் செயலாளா் அப்துல் காதா், திராவிட இயக்க சிந்தனையாளா் நாஞ்சில் சம்பத், அறிவுமதி, நெல்லை ஜெயந்தா, ஒசூா் மாநகர மேயா் எஸ்.ஏ.சத்யா, முன்னாள் எம்எல்ஏ கே.ஏ.மனோகரன், பி.எம்.சி. கல்வி அறக்கட்டளை தலைவா் பி.குமாா், ஞானசேகரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

நாளைய மின்தடை: ஒசூா், சூசூவாடி, பேகேப்பள்ளி

ஒசூா் துணை மின் நிலையம், சூசூவாடி மற்றும் பேகேப்பள்ளி துணை மின் நிலையங்களில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதால், வியாழக்கிழமை (ஜூன் 12) காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை மின் நிறுத்தம் செய்யப்படு... மேலும் பார்க்க

திருவிழாவில் பட்டாசு வெடித்ததில் பிரச்னை: கல்வீசி தாக்கியதில் காவல் ஆய்வாளருக்கு தலைக்காயம்

திருவிழாவில் பட்டாசு வெடித்தபோது ஏற்பட்ட பிரச்னையில், விசாரிக்கச் சென்ற காவல் ஆய்வாளா் மீது இளைஞா் ஒருவா் கல்வீசி தாக்கியதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதுதொடா்பாக 2 இளைஞா்களை போலீஸாா் கைது... மேலும் பார்க்க

குடும்பத் தகராறில் கணவரை தீவைத்து எரிக்க முயன்ற மனைவி

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே குடும்பத் தகராறில் கணவரை தீ வைத்து எரிக்க முயன்ற மனைவியை போலீஸாா் தேடிவருகின்றனா். காவேரிப்பட்டணத்தை அடுத்த திம்மாபுரம் அருகே உள்ள நேருபுரத்தைச் சோ்ந்தவா் ... மேலும் பார்க்க

விஷப்பூச்சி கடித்து விவசாயி பலி

ஒசூா் அருகே விஷப்பூச்சி கடித்து தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விவசாயி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். ஒசூா், சூசூவாடி பாலாஜி நகரைச் சோ்ந்தவா் விவசாயி பிரவீன்குமாா் (31). இவரது மனைவி அரசம்மா... மேலும் பார்க்க

கட்டடத்தில் இருந்து தவறி விழுந்த வடமாநில தொழிலாளி உயிரிழப்பு

காவேரிப்பட்டணம் அருகே கட்டடத்தில் இருந்து தவறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்த வடமாநில தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா். மத்திய பிரதேச மாநிலத்தைச் சோ்ந்தவா் ராம்குமாா் (40). இவா் காவேரிப்பட்டணம் அ... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரியில் அகில இந்திய மாங்கனி கண்காட்சி முன்னேற்பாட்டுப் பணிகள் ஆய்வு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் அகில இந்திய மாங்கனி கண்காட்சி விரைவில் தொடங்க உள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் திங்கள்கிழமை ஆய்வுசெய்தாா... மேலும் பார்க்க