குஜராத் விமான விபத்து! பிரிட்டன், போர்ச்சுகல், கனடா அமைச்சர்களுடன் மத்திய அமைச்ச...
ராகிங்கை தடுக்க கண்காணிப்பு கேமரா, 7 பேர் குழு: அமைச்சர் கோ.வி.செழியன்
தஞ்சாவூர்: தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் ராகிங்கை தடுக்க கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு 5 பேர் மற்றும் 7 பேர் கொண்ட குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளதாக உயர்க்கல்வித் துறை அமைச்சர் கோ.வி.செழியன் தெரிவித்தார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் ஜூன் 15 மற்றும் 16 ஆகிய இரண்டு நாள்கள் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவதற்காக க முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகிறார்.
முதல்வரை வரவேற்கும் வகையில் தஞ்சை பழைய பேருந்து நிலையத்தில் முதல்வர் மற்றும் துணை முதல்வர் உருவம் பொறித்த ராட்சத பலூன் பறக்க விடப்பட்டது.
பலூனை உயர்கல்வித் துறை அமைச்சர் கோ.வி.செழியன் பறக்கவிட்டார்.

பின்னர் அவர் செய்தியாளர்களுடன் பேசியதாவது:
பள்ளி மற்றும் கல்லூரிகளில் ராகிங்கை தடுக்க கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு 5 பேர் மற்றும் 7 பேர் கொண்ட குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
உயர்க்கல்வியில் இடை நிறுத்தம் இல்லாமல் கல்வியைத் தொடர தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
மேட்டூர் அணையில் இன்று திறக்கப்படும் தண்ணீர் கடைமடை வரை எளிதாக செல்லவதற்காக ஏ மற்றும் பி வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டு உள்ளன.
மேலும், விவசாயிகளுக்கு விதை நெல் தட்டுப்பாடு இல்லாமல் கிடைப்பதற்காக போதியளவு கையிறுப்பு உள்ளதாக அமைச்சர் கோ.வி.செழியன் கூறினார்.