செய்திகள் :

ராகிங்கை தடுக்க கண்காணிப்பு கேமரா, 7 பேர் குழு: அமைச்சர் கோ.வி.செழியன்

post image

தஞ்சாவூர்: தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் ராகிங்கை தடுக்க கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு 5 பேர் மற்றும் 7 பேர் கொண்ட குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளதாக உயர்க்கல்வித் துறை அமைச்சர் கோ.வி.செழியன் தெரிவித்தார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் ஜூன் 15 மற்றும் 16 ஆகிய இரண்டு நாள்கள் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவதற்காக க முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகிறார்.

முதல்வரை வரவேற்கும் வகையில் தஞ்சை பழைய பேருந்து நிலையத்தில் முதல்வர் மற்றும் துணை முதல்வர் உருவம் பொறித்த ராட்சத பலூன் பறக்க விடப்பட்டது.

பலூனை உயர்கல்வித் துறை அமைச்சர் கோ.வி.செழியன் பறக்கவிட்டார்.

முதல்வரை வரவேற்கும் வகையில் தஞ்சை பழைய பேருந்து நிலையத்தில் பறக்கவிடப்பட்டுள்ள முதல்வர், துணைமுதல்வர் உருவம் பொறித்த ராட்சத பலூன்

பின்னர் அவர் செய்தியாளர்களுடன் பேசியதாவது:

பள்ளி மற்றும் கல்லூரிகளில் ராகிங்கை தடுக்க கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு 5 பேர் மற்றும் 7 பேர் கொண்ட குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

உயர்க்கல்வியில் இடை நிறுத்தம் இல்லாமல் கல்வியைத் தொடர தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

மேட்டூர் அணையில் இன்று திறக்கப்படும் தண்ணீர் கடைமடை வரை எளிதாக செல்லவதற்காக ஏ மற்றும் பி வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டு உள்ளன.

மேலும், விவசாயிகளுக்கு விதை நெல் தட்டுப்பாடு இல்லாமல் கிடைப்பதற்காக போதியளவு கையிறுப்பு உள்ளதாக அமைச்சர் கோ.வி.செழியன் கூறினார்.

என் உருவப் படத்தை வைத்து உற்சவம் செய்கிறார் அன்புமணி: ராமதாஸ் பேட்டி

விஜய் ரூபானிக்கு அதிர்ஷ்ட எண்ணே துரதிர்ஷ்டமாக மாறிய சோகம்!

அகமதாபாத்: அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமானத்தில் பலியானவர்களில் குஜராத் முன்னாள் முதல்வரும் பாஜகவின் மூத்தத் தலைவரான விஜய் ரூபானியும்(68) ஒருவர். லண்டனில் உள்ள தனது மகளைச் சந்திப்பதற்காக விமானத்... மேலும் பார்க்க

விமான விபத்து: கருப்புப் பெட்டி மீட்பு!

அகமதாபாத்: இரண்டு என்ஜின்களும் செயலிழந்தது அல்லது புறப்பட்ட சிறிது நேரத்தில் பறவை மோதியது, ஏா் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதற்கு காரணமாக இருக்கலாம் என்று விமானத் துறை நிபுணா்கள் தெரிவித்த நிலையில்... மேலும் பார்க்க

நத்தம் அருகே சாலை தடுப்பில் லாரி மோதி விபத்து: நல்வாய்ப்பாக உயிர் தப்பிய ஓட்டுநர்!

நத்தம் அருகே சாலை தடுப்பில் ஓடுகள் ஏற்றி வந்த லாரி மோதி விபத்துக்குள்ளானதில், ஆனால் ஓட்டுநர் நல்வாய்ப்பாக காயங்கள் ஏதுவுமின்றி உயிர் தப்பினார். அடிக்கடி சாலை தடுப்புகளால் தொடரும் விபத்துகளால் மக்கள் அ... மேலும் பார்க்க

ரூ.73 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.8 உயா்ந்து ரூ.72,808-க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை ஒரு நாள் உயருவதும், மறுநாள் குறைவதுமான நிலையிலேயே நீடித்து வந்த நிலையில், கடந... மேலும் பார்க்க

தனியாா் முதியோா் காப்பகத்தில் உணவருந்திய மேலும் ஒருவர் உயிரிழப்பு

சுரண்டை: தென்காசி மாவட்டம் சுந்தரபாண்டியபுரத்தில் உள்ள தனியாா் முதியோா் காப்பகத்தில் மாமிச உணவருந்திய 3 போ் உயிரிழந்த நிலையில், மேலும் ஒருவர் வெள்ளிக்கிழமை காலை உயிரிழந்தை அடுத்து உயிரிழப்பு 4 ஆக உயர... மேலும் பார்க்க

மேட்டூா் அணை நிலவரம்!

மேட்டூா்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 6,339 கன அடியிலிருந்து 6,896 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட... மேலும் பார்க்க