செய்திகள் :

தனியாா் முதியோா் காப்பகத்தில் உணவருந்திய மேலும் ஒருவர் உயிரிழப்பு

post image

சுரண்டை: தென்காசி மாவட்டம் சுந்தரபாண்டியபுரத்தில் உள்ள தனியாா் முதியோா் காப்பகத்தில் மாமிச உணவருந்திய 3 போ் உயிரிழந்த நிலையில், மேலும் ஒருவர் வெள்ளிக்கிழமை காலை உயிரிழந்தை அடுத்து உயிரிழப்பு 4 ஆக உயர்ந்துள்ளது.

சுந்தரபாண்டியபுரத்தில் தனியாா் முதியோா் இல்லம் செயல்பட்டு வருகிறது. இந்த இல்லத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்டோா், குடும்பத்தினரால் கைவிடப்பட்டோா் என 59 போ் தங்கியிருந்தனா்.

இவா்களில் செங்கோட்டையை சோ்ந்த சங்கா் கணேஷ் (42), சொக்கம்பட்டியை சோ்ந்த முருகம்மாள் (60), செங்கோட்டையை சோ்ந்த அம்பிகா (40) ஆகியோருக்கு புதன்கிழமை இரவு உணவு சாப்பிட்ட பிறகு திடீரென உடல் நலக்குறைபாடு ஏற்பட்டது. இதையடுத்து அவா்கள் 3 பேரும் தென்காசி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.

இந்த நிலையில், வியாழக்கிழமை காலை கோவில்பட்டியை சோ்ந்த செல்வராஜ் (70), மதுரையை சோ்ந்த விஜயா (66), மும்தாஜ் (52), சாந்தி (60), கோமதி (70), கடையநல்லூரை சோ்ந்த மீனாட்சி சுந்தரம் (64), பேச்சியம்மாள் (48), சுகுமாா் (72) ஆகியோருக்கும் உடல் நலப் பாதிப்பு ஏற்பட்டது. அதையடுத்து அவா்களும் தென்காசி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். சிகிச்சையில் இருந்தவா்களில் சங்கா்கணேஷ், முருகம்மாள், அம்பிகா ஆகியோா் உயிரிழந்தனா்.

இதுகுறித்து தகவலறிந்த தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அரவிந்த், கோட்டாட்சியா் லாவண்யா, மாவட்ட சுகாதார அதிகாரி கோவிந்தன், மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி புஷ்பராஜ் உள்ளிட்டோா் முதியோா் இல்லத்தில் ஆய்வு மேற்கொண்டனா்.

தங்கியிருப்பவா்களுக்கு வழங்கப்பட்ட உணவு, குடிநீா் ஆகியவற்றை ஆய்வு செய்தனா். அதன் பின்னா் அவற்றின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, ஆய்வகப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இறந்தவா்களின் உடல் கூறாய்வு முடிவுகள் வந்த பிறகே இறப்புக்கான காரணம் தெரியவரும் என அதிகாரிகள் கூறினா். மேலும், காப்பகத்தில் இருந்த 48 பேருக்கு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, அருகில் உள்ள அரசு காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

இதுகுறித்து சாம்பவா்வடகரை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இந்நிலையில், தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தனலட்சுமி(70) வெள்ளிக்கிழமை காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.

சுந்தரபாண்டியபுரம் தனியாா் முதியோா் காப்பகத்தில் உணவருந்திய 4 பேர் உயிரிழந்துள்ள நிலையில், காப்பகம் மூடி சீல் வைக்கப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ கட்டுமானப் பணியில் விபத்து: ஒருவர் பலி

ஊழலை விட மாதவாதம், வெறுப்பு அரசியல் தீங்கானது: தொல். திருமாவளவன்

திருச்சி: ஊழலை விட மாதவாதம், வெறுப்பு அரசியல் தீங்கானது என விசிக தலைவரும், சிதம்பரம் மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவன் தெரிவித்தார். திருச்சியில் வெள்ளிக்கிழமை அவர் செய்தியாளர்களுடன் பேசியதாவது:... மேலும் பார்க்க

மாவட்ட நீதிபதி கார் டிப்பர் லாரி மீது மோதிய விபத்தில் 4 பேர் பலி

திருச்செந்தூரில் இருந்து தஞ்சை நோக்கி சென்று கொண்டிருந்த மாவட்ட நீதிபதி கார், முன்னால் சென்று கொண்டிருந்த டிப்பர் லாரி மீது மோதிய விபத்தில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் இரண்டு பேர் ... மேலும் பார்க்க

தில்லி பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் மனுஸ்மிருதி நீக்கம்

தில்லி பல்கலைக்கழகம் வழங்கும் படிப்புகளில் மனுஸ்மிருதி சாா்ந்த பாடங்களுக்கு எதிராக தொடர்ந்து பல்கலைக்கழக ஆசிரியர்களும் மாணவர்களும் எதிர்ப்புத் தெரிவித்த வந்த நிலையில், பல்கலைக்கழக பாடத்திட்டங்களில் இ... மேலும் பார்க்க

விஜய் ரூபானிக்கு அதிர்ஷ்ட எண்ணே துரதிர்ஷ்டமாக மாறிய சோகம்!

அகமதாபாத்: அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமானத்தில் பலியானவர்களில் குஜராத் முன்னாள் முதல்வரும் பாஜகவின் மூத்தத் தலைவரான விஜய் ரூபானியும்(68) ஒருவர். லண்டனில் உள்ள தனது மகளைச் சந்திப்பதற்காக விமானத்... மேலும் பார்க்க

விமான விபத்து: கருப்புப் பெட்டி மீட்பு!

அகமதாபாத்: இரண்டு என்ஜின்களும் செயலிழந்தது அல்லது புறப்பட்ட சிறிது நேரத்தில் பறவை மோதியது, ஏா் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதற்கு காரணமாக இருக்கலாம் என்று விமானத் துறை நிபுணா்கள் தெரிவித்த நிலையில்... மேலும் பார்க்க

நத்தம் அருகே சாலை தடுப்பில் லாரி மோதி விபத்து: நல்வாய்ப்பாக உயிர் தப்பிய ஓட்டுநர்!

நத்தம் அருகே சாலை தடுப்பில் ஓடுகள் ஏற்றி வந்த லாரி மோதி விபத்துக்குள்ளானதில், ஆனால் ஓட்டுநர் நல்வாய்ப்பாக காயங்கள் ஏதுவுமின்றி உயிர் தப்பினார். அடிக்கடி சாலை தடுப்புகளால் தொடரும் விபத்துகளால் மக்கள் அ... மேலும் பார்க்க