செய்திகள் :

திருப்பூர்: மாற்றுச் சமூக பெண்ணை மகன் மணந்ததால் கோவம்; மனைவியை வெட்டிக் கொன்று கணவர்; நடந்தது என்ன?

post image

திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் அடுத்த வேலப்பநாயக்கன்வலசு பாரக்காட்டு தோட்டத்தைச் சேர்ந்தவர் வேலுச்சாமி (65).

இவரது மனைவி சாமியாத்தாள் (60). இவர்களுக்கு வித்யாசாகர் (33) என்ற மகனும், அபிநயா (36) என்ற மகளும் உள்ளனர்.

இந்நிலையில் மகன் வித்யாசாகர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த பெண்ணைக் காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ளார்.

இதற்கு உடன்படாத வேலுச்சாமி, மனைவி சாமியாத்தாளுடன் சண்டை போட்டு விட்டு, கடந்த ஒரு மாதத்திற்கு மேலாகப் பிரிந்து அவரின் சொந்த ஊரான கரூர் மாவட்டம், சின்ன தாராபுரத்திற்குச் சென்றுவிட்டார்.

வேலப்பநாயக்கன்வலசு பாரக்காட்டு தோட்டத்தில் சாமியாத்தாள் அவரது மகன் வித்யாசாகர் மற்றும் மருமகள் ஆகியோர் வசித்துவருகின்றனர்.

போலீஸ்
போலீஸ்

இந்நிலையில், புதன்கிழமை காலை வழக்கம்போல் சாமியாத்தாள் தோட்டத்திற்கு ஆடுமேய்க்கச் சென்றுள்ளார். அப்போது, அங்கு வந்த வேலுச்சாமி, சாமியாத்தாளுடன் மகன் திருமணம் குறித்து தகராறில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது, இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போது, தான் மறைத்து வைத்திருந்த அரிவாள் மற்றும் கற்களால் சாமியாத்தாளை வேலுச்சாமி தாக்கியுள்ளார்.

இதில், மயக்கமடைந்த சாமியாத்தாளின் வாயில் தென்னை மர மாத்திரையைத் திணித்து கொலை செய்துள்ளார். பின்னர் மனைவி இறந்ததை உறுதி செய்துகொண்ட வேலுச்சாமி மறைத்து வைத்திருந்த தென்னை மர மாத்திரையைச் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நீண்ட நேரமாகியும் தாய் சாமியாத்தாள் வீட்டுக்கு வராததால் சந்தேகமடைந்து வித்யாசாகர் தோட்டத்துக்குள் சென்று பார்த்தபோது இருவரும் இறந்த நிலையில் கிடந்துள்ளனர்.

வேலுச்சாமி-சாமியாத்தாள் தம்பதி
வேலுச்சாமி-சாமியாத்தாள் தம்பதி

தகவலறிந்த வெள்ளகோவில் போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று பார்த்தபோது சாமியாத்தாளுக்குப் பின்தலையில் இரத்தக் காயத்துடனும், வேலுச்சாமியின் வாயில் நுரை வந்த நிலையிலும் இறந்து கிடந்துள்ளனர்.

சோதனை மேற்கொண்ட போலீசார் திருப்பூரில் இறந்து மேப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்களை வரவழைத்து தடயங்கள் சேகரிக்கப்பட்டது.

பிரேதத்தைக் கைப்பற்றிய போலீசார் பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வெள்ளகோவில் போலீசுார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மகன் மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த பெண்ணைக் காதலித்து திருமணம் செய்துகொண்டதற்காகத் தனது மனைவியைக் கணவனே வெட்டிக் கொலை செய்துவிட்டு தற்கொலை செய்துகொண்டது திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

Ooty: ஈட்டி மரங்கள் மீது அத்துமீறல்; பிரபல கான்ட்ரக்டர் ராயன் மீது வழக்கு; வனச் சட்டம் சொல்வது என்ன?

நீலகிரி மாவட்டத்தில் ஈட்டி, சந்தனம், தேக்கு போன்ற விலை உயர்ந்த மரங்கள் அதிகளவில் உள்ளன. பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகள்‌ மட்டுமின்றி தனியாருக்குச் சொந்தமான நிலங்களிலும் இந்த வகை மரங்கள் காணப்படுகின்றன.தன... மேலும் பார்க்க

Operation Honeymoon: "சோனம் மீது சந்தேகம் வர இதான் காரணம்..." - மேகாலயா டிஜஜி சொல்வது என்ன?

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த ராஜா ரகுவன்சியும், அவரது மனைவி சோனமும் கடந்த மாதம் 21ம் மேகாலயாவிற்குத் தேனிலவிற்குச் சென்றனர்.சென்ற இடத்தில் அவர்கள் இருவரும் கடந்த 23ம் தேதி திடீரென காணாமல்... மேலும் பார்க்க

திருச்சி: காலி மனைக்கு வரி நிர்ணயம் செய்ய ரூ. 10,000 லஞ்சம் - பில் கலெக்டர் சிக்கியது எப்படி?

திருச்சி, கே.கே.நகரில் உள்ள இந்திரா காந்தி தெருவைச் சேர்ந்தவர் சீனிவாசன்.இவர், தனது மனைவி அறிவுச்செல்வி பெயரில் உள்ள திருச்சி, கொட்டப்பட்டு கிராமம், அன்பில் நகரில் சுமார் 5920 சதுரடி உள்ள காலிமனைக்கு ... மேலும் பார்க்க

வழக்கிலிருந்து விடுவிக்க ரூ.7 லட்சம் லஞ்சம்? - ஆசிரியர் புகார்... சிபிஐ அதிகாரி மீது வழக்கு பதிவு!

வழக்கிலிருந்து விடுவிப்பதற்காக ஆசிரியரிடம் லஞ்சம் கேட்ட விவகாரத்தில் சிபிஐ அதிகாரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஆசிரியர் ராமச்சந்திரன்வருமான வரி மோசடி புகார் தொ... மேலும் பார்க்க

திரிபுரா: இளைஞரைக் கொன்று ஐஸ்கிரீம் பெட்டியில் வைத்த நபர்; முக்கோண காதல் விவகாரத்தில் என்ன நடந்தது?

திரிபுரா மாநிலம் அகார்த்தலாவைச் சேர்ந்த சரிபுல் இஸ்லாம் (28) என்ற வாலிபர் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென காணாமல் போய்விட்டார்.இது தொடர்பாக சரிபுல் உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக... மேலும் பார்க்க

கோவில் கும்பாபிஷேகத்தில் குடும்பத்துடன் கைவரிசை; நகை திருட்டில் ஈடுபட்ட 3 பெண்கள் உட்பட ஐவர் கைது

ராமநாதபுரம் அருகே உள்ளது உத்திரகோசமங்கை. உலக புகழ்பெற்ற மரகத நடராஜர் சன்னதி அமைந்துள்ள மங்களநாதர் சுவாமி கோயில் கும்பாபிஷேகம் கடந்த மே மாதம் 4-ம் தேதி நடந்தது.இவ்விழாவில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து வ... மேலும் பார்க்க