செய்திகள் :

வழக்கிலிருந்து விடுவிக்க ரூ.7 லட்சம் லஞ்சம்? - ஆசிரியர் புகார்... சிபிஐ அதிகாரி மீது வழக்கு பதிவு!

post image

வழக்கிலிருந்து விடுவிப்பதற்காக ஆசிரியரிடம் லஞ்சம் கேட்ட விவகாரத்தில் சிபிஐ அதிகாரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆசிரியர் ராமச்சந்திரன்

வருமான வரி மோசடி புகார் தொடர்பாக சிபி-ஐயால் கைது செய்யப்பட்ட அரசு பள்ளி ஆசிரியர் ராமச்சந்திரனிடம் வழக்கிலிருந்து விடுவிக்க ரூபாய் 7 லட்சம் லஞ்சம் கேட்ட விவகாரம் தொடர்பாக மதுரை சிபிஐ அலுவலர் தினேஷ்குமார் என்பவர் மீது மதுரை சிபிஐ ஊழல் தடுப்பு பிரிவால் 30.05.2025 அன்று வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கடந்த 2022 ஆம் ஆண்டு குடியரசுத் தலைவரிடம் தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆசிரியர் ராமச்சந்திரன். இவர் சகோதரர் பஞ்சாட்சரத்தின் வங்கி கணக்கிலிருந்து 12 லட்சம் பெற்று வருமானவரி முறைகேட்டில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் சிபிஐ-யால் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இவருடைய தேசிய நல்லாசிரியர் விருது திரும்பப் பெறப்பட்டது.

இவர் வழக்கு விஷயமாக மதுரை சிபிஐ அலுவலகத்திற்கு சென்றபோது, அங்கிருந்த சிபிஐ அதிகாரி என்று அறிமுகப்படுத்திக்கொண்ட தினேஷ்குமார் என்பவர் இந்த வழக்கிலிருந்து விடுவிப்பதற்கு தன்னிடம் 7 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக கடந்த 2023 ஆம் ஆண்டு ஆசிரியர் ராமச்சந்திரன் புகார் தெரிவித்தார். இது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆசிரியர் ராமச்சந்திரன் புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய சிபிஐ ஊழல் தடுப்பு பிரிவு, சிபிஐ அதிகாரி தினேஷ்குமார் மீது கடந்த 30.05.2025 அன்று வழக்கு பதிவு செய்துள்ளது.

இது தொடர்பான விசாரணையில் ஆஜராக ஆசிரியர் ராமச்சந்திரனுக்கு மதுரை சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. மதுரை சிபிஐ ஊழல் தடுப்பு பிரிவை சேர்ந்த அதிகாரி சிபிஐ ஊழல் தடுப்பு பிரிவால் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

``உடல், மன ரீதியான பிரச்னை..'' - கிரானைட் முறைகேடு வழக்கில் இருந்து விடுவிக்க துரை தயாநிதி மனு

அரசுக்கு ரூ.259 கோடி இழப்பீடு ஏற்படுத்தியதாக மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதியின் ஒலிம்பஸ் நிறுவனம் மீது அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கிலிருந்து விடுவிக்க துரை தயாநிதி தரப்பில் மனு... மேலும் பார்க்க

பீகார்: பாஜக கொடியுடன் வந்த SUV கார்; காவலர்கள் மீது மோதியதில் பெண் காவலர் பலி; ஒட்டுநர் கைது

பீகார் மாநிலம் பாட்னாவின் ஸ்ரீகிருஷ்ணா பூரி பகுதிக்கு அருகே, அடல் பாத் பகுதியில் வாகனப் பரிசோதனையிலிருந்த காவல்கள் மீது கார் மோதியது.வாகனம் மோதியதில் தூக்கி வீசப்பட்ட மூன்று காவலர்களும் உடனடியாக அருகி... மேலும் பார்க்க

Ooty: ஈட்டி மரங்கள் மீது அத்துமீறல்; பிரபல கான்ட்ரக்டர் ராயன் மீது வழக்கு; வனச் சட்டம் சொல்வது என்ன?

நீலகிரி மாவட்டத்தில் ஈட்டி, சந்தனம், தேக்கு போன்ற விலை உயர்ந்த மரங்கள் அதிகளவில் உள்ளன. பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகள்‌ மட்டுமின்றி தனியாருக்குச் சொந்தமான நிலங்களிலும் இந்த வகை மரங்கள் காணப்படுகின்றன.தன... மேலும் பார்க்க

Operation Honeymoon: "சோனம் மீது சந்தேகம் வர இதான் காரணம்..." - மேகாலயா டிஜஜி சொல்வது என்ன?

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த ராஜா ரகுவன்சியும், அவரது மனைவி சோனமும் கடந்த மாதம் 21ம் மேகாலயாவிற்குத் தேனிலவிற்குச் சென்றனர்.சென்ற இடத்தில் அவர்கள் இருவரும் கடந்த 23ம் தேதி திடீரென காணாமல்... மேலும் பார்க்க

திருச்சி: காலி மனைக்கு வரி நிர்ணயம் செய்ய ரூ. 10,000 லஞ்சம் - பில் கலெக்டர் சிக்கியது எப்படி?

திருச்சி, கே.கே.நகரில் உள்ள இந்திரா காந்தி தெருவைச் சேர்ந்தவர் சீனிவாசன்.இவர், தனது மனைவி அறிவுச்செல்வி பெயரில் உள்ள திருச்சி, கொட்டப்பட்டு கிராமம், அன்பில் நகரில் சுமார் 5920 சதுரடி உள்ள காலிமனைக்கு ... மேலும் பார்க்க

திரிபுரா: இளைஞரைக் கொன்று ஐஸ்கிரீம் பெட்டியில் வைத்த நபர்; முக்கோண காதல் விவகாரத்தில் என்ன நடந்தது?

திரிபுரா மாநிலம் அகார்த்தலாவைச் சேர்ந்த சரிபுல் இஸ்லாம் (28) என்ற வாலிபர் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென காணாமல் போய்விட்டார்.இது தொடர்பாக சரிபுல் உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக... மேலும் பார்க்க