இனிமேல் பவுண்டரிக்கு வெளியே கேட்ச் இல்லை..! எம்சிசியின் புதிய விதிமுறை!
சென்செக்ஸ் 573.38 புள்ளிகளுடனும், நிஃப்டி 169.60 புள்ளிகளுடன் சரிந்து முடிவு!
மும்பை: ஈரான் மீதான இஸ்ரேலின் ராணுவத் தாக்குதல்களுக்குப் பிறகு மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதட்டங்களால், இன்றைய வர்த்தகத்தில் பெஞ்ச்மார்க் குறியீடுகள் ஒரு சிறிய மீட்சிக்கு பிறகு சரிந்து முடிந்தன.
இன்றைய ஆரம்ப வர்த்தகத்தில் கச்சா எண்ணெய் விலை 7% க்கும் அதிகமாக உயர்ந்து. இஸ்ரேல் தாக்குதலைத் தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கும் மேலான அதிகபட்ச நிலையை இது எட்டியது. இஸ்ரேல் தனது அணுசக்தி நிலையங்கள் மீதான தாக்குதலுக்கு பதிலடி வழங்கும் என்று ஈரான் கூறியதை மேற்கோள் காட்டியதாக ராய்ட்டர்ஸ் தெரிவித்தது.
வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 573.38 புள்ளிகள் சரிந்து 81,118.60 ஆகவும், நிஃப்டி 169.60 புள்ளிகள் சரிந்து 24,718.60 ஆகவும் இருந்தது. பிஎஸ்இ-யில் மிட் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகள் தலா 0.3 சதவிகிதம் சரிந்தன. இந்த வாரத்தில், பிஎஸ்இ-யில் சென்செக்ஸ் 1.3 சதவிகிதமும், நிஃப்டி 1 சதவிகிதமும் சரிந்தது. இதற்கிடையில் சில்லறை பணவீக்கம் 75 மாதங்களில் இல்லாத அளவுக்கு 2.82% ஆக குறைந்துள்ளது.
சென்செக்ஸில் கோட்டக் மஹிந்திரா வங்கி, பவர் கிரிட், அதானி போர்ட்ஸ், டாடா மோட்டார்ஸ், அல்ட்ராடெக் சிமென்ட் மற்றும் ஆசிய பெயிண்ட்ஸ் ஆகியவை சரிந்தன.
நிஃப்டி-யில் அதானி போர்ட்ஸ், ஐடிசி, எஸ்பிஐ, இண்டஸ்இண்ட் வங்கி, ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ், பாரத் எலக்ட்ரானிக்ஸ், ஓஎன்ஜிசி, டெக் மஹிந்திரா, டிசிஎஸ், விப்ரோ ஆகியவை சரிந்த நிலையில் மீடியா பங்குகளை தவிர, மற்ற அனைத்து துறை குறியீடுகளுமான எஃப்எம்சிஜி, பொதுத்துறை வங்கி, எண்ணெய் & எரிவாயு, மின்சாரம், தொலைத்தொடர்பு 0.5 முதல் 1 சதவிகிதம் வரை சரிவுடன் முடிவடைந்தன.
பத்திரங்கள் மூலம் ரூ.9,500 கோடி திரட்டும் திட்டங்களால் கனரா வங்கி பங்குகள் 3.5 சதவிகிதம் சரிந்தன. ஜே.வி. ( Joint Venture) மூலம் ரூ.311 கோடி மதிப்புள்ள எல்.ஓ.ஏ-வைப் ( Letter of Authorization) பெற்றதால் கெர்னெக்ஸ் மைக்ரோசிஸ்டம்ஸ் பங்குகள் 5 சதவிகிதம் உயர்ந்தன.
டால்ப்ரோஸ் ஆட்டோமோட்டிவ் காம்பொனென்ட்ஸ் பங்குகள் ரூ.580 கோடி ஆர்டர்களை வென்றதால் அதன் பங்குகள் 2.5 சதவிகிதம் உயர்ந்தன.
திவால் நடவடிக்கைகளைத் தொடங்க ஐஆர்இடிஏ-வின் மனுவை என்சிஎல்டி ஒப்புக்கொண்டதையடுத்து ஜென்சோல் இன்ஜினியரிங் பங்குகள் 52 வாரக் குறைந்த அளவை எட்டியது.
ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்குப் பிறகு எண்ணெய் விலை உயர்ந்ததால் கச்சா எண்ணெய்க்கு பங்குகள் அழுத்தத்தில் இருந்தன. அதே நேரத்தில் நேற்று (ஜூன் 12) அகமதாபாத்தில் ஏர் இந்தியாவின் ட்ரீம்லைனர் போயிங் 787-8 விமான விபத்துக்குப் பிறகும், விமானப் பங்குகள் இரண்டாவது நாளாக சரிந்தன.
அதிகரித்து வரும் உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகளுக்கு மத்தியில், முதலீட்டாளர்களுக்கு பாதுகாப்புப் பங்குகள் வாங்கும் ஆர்வத்தின் மீதான நம்பிக்கையைத் இது வெகுவாக தூண்டியுள்ளது.
நாராயண ஹ்ருதயாலயா, மணப்புரம் நிதி, மேக்ஸ் ஹெல்த்கேர், முத்தூட் நிதி, அஸ்ட்ராஜெனெகா பார்மா, ஜேகே சிமென்ட் உள்ளிட்ட 80 பங்குகள் இன்று பிஎஸ்இ-யில் 52 வார உச்சத்தைத் பதிவு செய்தன.
ஆசிய சந்தைகளில், தென் கொரியாவின் கோஸ்பி, ஜப்பானின் நிக்கி 225 குறியீடு, ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு மற்றும் ஹாங்காங்கின் ஹாங் செங் ஆகியவை சரிந்த வர்த்தகமாகின.
நேற்று (வியாழக்கிழமை) அமெரிக்க சந்தைகள் உயர்ந்து முடிவடைந்தன.
அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் நேற்று (வியாழக்கிழமை) ரூ.3,831.42 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்றுள்ளனர்.
இதையும் படிக்க: ஏசியன் பெயிண்ட்ஸின் 3.64% பங்குகளை விற்ற ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்!