செய்திகள் :

ஏசியன் பெயிண்ட்ஸின் 3.64% பங்குகளை விற்ற ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்!

post image

புதுதில்லி: முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், நேற்று (ஜூன் 12) ஏசியன் பெயிண்ட்ஸின் 3.64 சதவிகித பங்குகளை விற்ற நிலையில், அதனை எஸ்பிஐ மியூச்சுவல் ஃபண்ட் ரூ.7,703 கோடிக்கு வாங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

தேசிய பங்குச் சந்தையில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், அதன் துணை நிறுவனமான சித்தாந்த் கமர்ஷியல்ஸ் பிரைவேட் லிமிடெட் மூலம் 3.50 கோடி ஈக்விட்டி பங்குகளை ஆதாவது ஏசியன் பெயிண்ட்ஸின் 3.64 சதவிகித பங்குகளை விற்றது.

பங்குகள் தலா ஒன்றுக்கு சராசரியாக ரூ.2,201 என்று விற்பனையான நிலையில், இதன் மூலம் பரிவர்த்தனை தொகையாக ரூ.7,703.50 கோடியை ஈட்டியது ரிலையன்ஸ்.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தனது பங்குகளை விற்பனை செய்த பிறகு, தனது ஒரு பிரிவான சித்தாந்த் கமர்ஷியல்ஸ் இடம் உள்ள பங்கு 4.90 சதவிகிதத்திலிருந்து 1.26 சதவிகிதமாகக் குறைந்துள்ளது.

பங்குகளை கையகப்படுத்தியதன் மூலம், ஏசியன் பெயிண்ட்ஸில் உள்ள எஸ்பிஐ மியூச்சுவல் ஃபண்டின் பங்கு 1.51 சதவிகிதத்திலிருந்து 5.15 சதவிகிதமாக உயர்ந்தது.

என்எஸ்இ-யில் ஏசியன் பெயிண்ட்ஸின் பங்குகள் நேற்று 0.73 சதவிகிதம் உயர்ந்து ரூ.2,225 ஆக முடிவடைந்தது.

இதையும் படிக்க: 25 கோடி கிலோவாக உயா்ந்த தேயிலை ஏற்றுமதி

கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: சரிந்து முடிந்த பங்குச் சந்தை வர்த்தகம்!

புதுதில்லி: மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் விலையில் வெகுவாக உயர்ந்ததையடுத்து, இன்றைய வர்த்தகத்தில் எண்ணெய் நிறுவன பங்குகள் சரிந்து முடிந்தன... மேலும் பார்க்க

டாலருக்கு நிகரான ரூபாய் 55 காசுகள் சரிந்து ரூ.86.07 ஆக முடிவு!

மும்பை: ஈரானின் அணுசக்தி தளங்கள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்தும், மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியிலும், உலகளாவிய கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு மற்றும் உறுதியான டால... மேலும் பார்க்க

சென்செக்ஸ் 573.38 புள்ளிகளுடனும், நிஃப்டி 169.60 புள்ளிகளுடன் சரிந்து முடிவு!

மும்பை: ஈரான் மீதான இஸ்ரேலின் ராணுவத் தாக்குதல்களுக்குப் பிறகு மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதட்டங்களால், இன்றைய வர்த்தகத்தில் பெஞ்ச்மார்க் குறியீடுகள் ஒரு சிறிய மீட்சிக்கு பிறகு சரிந்து முடிந்தன... மேலும் பார்க்க

பழசுக்கு புதுசு... ஹூண்டாய் அல்கஸார் கார்ப்பரேட் அறிமுகம்!

ஹூண்டாயின் அல்கஸாரில் புதிதாக கார்ப்பரேட் வேரியன்டை அறிமுகப்படுத்தியுள்ளது.ஹூண்டாய் நிறுவனத்தின் கிரெட்டா ரக கார்கள், 2021 ஆம் ஆண்டில் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டதால், கிரெட்டாவின் அல்கஸார் காரை நிற... மேலும் பார்க்க

பங்குச் சந்தை கடும் சரிவுடன் வர்த்தகம்!

வாரத்தின் கடைசி நாளான இன்று(வெள்ளிக்கிழமை) பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் காலை 9.30 மணி நிலவரப்படி, 867 புள்ளிகள் சரிந்து 80,824.98 ஆக வர்த்த... மேலும் பார்க்க

25 கோடி கிலோவாக உயா்ந்த தேயிலை ஏற்றுமதி

இந்தியாவின் தேயிலை ஏற்றுமதி கடந்த 2024-ஆம் ஆண்டில் 25.467 கோடி கிலோவாக உயா்ந்துள்ளது.இது குறித்து தேயிலை வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:2024-ஆம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பா்... மேலும் பார்க்க