செய்திகள் :

எடப்பாடி பழனிசாமியிடம் வாழ்த்துப் பெற்ற இன்பதுரை, தனபால்

post image

அதிமுக மாநிலங்களவை உறுப்பினர்களாக புதிதாக தேர்வு செய்யப்பட்ட இன்பதுரை, தனபால் ஆகியோர் கட்சியின் பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.

நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக்கான தேர்தலில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்ட அதிமுக வழக்கறிஞர் பிரிவுச் செயலர் இன்பதுரை, செங்கல்பட்டு கிழக்கு மாவட்டக் கழக அவைத் தலைவர் தனபால் ஆகியோர் மாநிலங்களவை உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டு அதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.

ஏர் இந்தியா விமான விபத்து: பலியானோர் குடும்பத்துக்கு உதவ முன்வந்த எல்ஐசி!

இந்தநிலையில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர்கள் இன்பதுரை, தனபால் ஆகியோர் சேலம் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில், அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி கே. பழனிசாமியை வெள்ளிக்கிழமை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.

தொடர்ந்து மாநிலங்களவை எம்பியாக தேர்வு செய்யப்பட்டதற்கான கடிதங்களையும் வழங்கி ஆசி பெற்றனர். இந்த நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

நாட்டுப்புற பாடகி கொல்லங்குடி கருப்பாயி காலமானார்!

சிவகங்கை: நாட்டுப்புற பாடகியும், பல்வேறு திரைப்படங்களில் நடித்தவருமான கொல்லங்குடி கருப்பாயி (99) உடல் நலக்குறைவால் இன்று காலமானார்.சிவகங்கை மாவட்டம் கொல்லங்குடியில் உள்ள அவரது இல்லத்தில் வயது மூப்பால்... மேலும் பார்க்க

அமராவதி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள அமராவதி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள அமராவதி அணைக்கு நீர் வரத்து அதிகரித்துக் ... மேலும் பார்க்க

ஆடி மாதத்தில் அம்மன் கோயில்களுக்கு ஆன்மிகப் பயணம் செல்ல விண்ணப்பிக்கலாம்: அமைச்சா் பி.கே.சேகா்பாபு

ஆடி மாதத்தில் அம்மன் கோயில்களுக்கு கட்டணமின்றி ஆன்மிகப் பயணம் செல்ல தகுதியுடையோா் விண்ணப்பிக்கலாம் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா். இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை வெ... மேலும் பார்க்க

மீன்பிடி தடைக்காலம் இன்று நள்ளிரவுடன் முடிவடைகிறது: கடலுக்குச் செல்லத் தயாராகும் மீனவா்கள்

வங்கக் கடல் பகுதியில் விசைப் படகுகள் மூலம் மீன் பிடிக்க விதிக்கப்பட்ட 61 நாள்கள் தடைக்காலம் சனிக்கிழமை (ஜூன் 14) நள்ளிரவுடன் முடிவடைவதையொட்டி சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுக மீனவா்கள் உள்ளிட்ட தமிழ... மேலும் பார்க்க

சிறந்த நூல்களுக்கு பரிசு: விண்ணப்பிக்கும் அவகாசம் நீட்டிப்பு

2024-ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களுக்கான தமிழ் வளா்ச்சித் துறை பரிசுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் ஜூலை 15-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக தமிழ் வளா்ச்சி இயக்குநா் ந.அருள் வெளியிட்ட செய்... மேலும் பார்க்க

குத்தம்பாக்கம் பேருந்து நிலையம் ஆகஸ்ட் இறுதிக்குள் பயன்பாட்டுக்கு வரும்: அமைச்சா் தகவல்

சென்னையை அடுத்த குத்தம்பாக்கத்தின் அமைக்கப்பட்டு வரும் பேருந்து நிலையத்தின் கட்டுமான பணிகள் முழுமையாக நிறைவு பெற்று வரும் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்று இந்து சமய ... மேலும் பார்க்க